Powered By Blogger

வியாழன், 13 செப்டம்பர், 2012

பக்தி

எல்லோருக்கும் இனிய காலை வணக்கம்.
மூஷிக வாஹனா பாத நமஸ்தே!!!

புகைப்படம்: எல்லோருக்கும் இனிய காலை வணக்கம்.
மூஷிக வாஹனா பாத நமஸ்தே!!!
எப்பொழுதும் சிவ தியானத்திலேயே இருப்பவர் சண்டிகேஸ்வரர். சிவ பூஜைக்கும், தியானத்திற்கும் இடையூறு விளைவிப்பவர் யாராயினும் அவரைக் கோபத்துடன் தண்டிப்பவர்.
சிவபெருமானுக்கு பூஜித்த மலர்களையே ( சிவ
நிர்மால்யம் ) இவர் ஏற்றுக் கொள்வார். சிவபெருமானுக்கு நிவேதனம் செய்த உணவையே தமக்கு ஏற்றுக் கொள்வார். இவையனைத்துமே இவரது பக்தியை பாராட்டி சிவபெருமான் அருளியவையாகும்
ராமாயணத்தில் வரும் வாலி, சுக்ரீவன் சண்டையிடும் போது நடந்த சம்பவங்களை ஐராவதீஸ்வரர் கோயிலில் காணலாம். இங்கு வாலியும், சுக்ரீவனும் சண்டையிடும் காட்சி செதுக்கப்பட்டிருக்கும் சிற்பத் தூணில் இருந்து பார்த்தால் ராமனின் சிற்பம் உள்ள தூண் தெரியாது. அதுபோல் ராமன் மறைந்திருந்து அம்பு தொடுக்கும் சிற்பம் இருக்கும் தூணிலிருந்து பார்த்தால் வாலி, சுக்ரீவன் சண்டையிடும் தூண் தெரியும். ராமாயணத்தில் வரும் வாலி, சுக்ரீவன் சண்டையை நேரில் பார்ப்பது போல் இக்காட்சி அமைந்திருக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக