Powered By Blogger

திங்கள், 25 மார்ச், 2013

தலைவா!

வெற்றி வந்து குவிந்தபோது கர்வமில்லை. தொடர் தோல்விகள் தடுமாறச் செய்ததில்லை. தலைவர்கள், இளைஞர்கள் மேல் நம்பிக்கை வைத்தால்  எதிலும் வெற்றி நிச்சயம். அதற்கு நல்லதோர் உதாரணம், இந்தியாவின் கிரிக்கெட் கேப்டன் தோனி.

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக அதிக டெஸ்ட் வெற்றிகளைக் குவித்த கேப்டனாக முடிசூட்டியுள்ளார் தோனி. முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் 21 டெஸ்ட் வெற்றிகள் எனும் சாதனையை முறியடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 22 வெற்றிகள். ஒருநாள்போட்டிகளில் 77 வெற்றிகள். டி 20 மற்றும் ஒருநாள் உலகக் கோப்பையை  வாங்கித் தந்தது என தோனி தலைமையில் இந்திய அணி தொடர்ந்து சாதித்து வந்திருக்கிறது.

 ‘என்னுடைய அணியில் சச்சின் எவ்வளவு முக்கியமானவரோ... அதே அளவுக்கு விராட் கோலியும் இஷாந்த் ஷர்மாவும்... எந்த ஒரு வீரரும் மிக மிக முக்கியமானவர்களே. இதில் ஒருநாளும் மூத்தவர், இளையவர் என்கிற பாகுபாடு கிடையாது.

அணியின் ஒவ்வொரு வீரருக்கும் தனித்தனித் திறமைகள் உண்டு. ஒவ்வொருவருக்கும் அணியில் முக்கியமான பொறுப்புகள் உண்டு. ஒரு கேப்டனாக அவற்றை சரியான அளவில் திட்டமிட்டுப் பயன்படுத்துவது, அவர்களுடைய பொறுப்பினை உணர்த்துவதுதான் என்னுடைய வேலை. அதனால், என்னுடைய வெற்றி எதுவுமே எனக்கு மட்டுமே சொந்தமானதல்ல... அது அணியின் ஒவ்வொருக்குமானது.’

தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் நம் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி கூறியவைதான் இது. எவ்வளவு உண்மையான வார்த்தைகள். ஓர் அணியை எப்படி வழிநடத்திச் செல்லவேண்டும் என்பதை இதைவிட சிறப்பாக சொல்லிவிட முடியாது. வெற்றிகளை சக வீரர்களுக்கு பங்கு போட்டுக் கொடுத்துவிட்டு... தோல்விகளுக்கு தன்னை மட்டும் பொறுப்பாக முன்னிறுத்துகிற கேப்டன்களைக் காண்பது மிக மிக அரிது.

தொடர் தோல்விகளைக் கண்டு பயந்து, கேப்டன் பதவிக்கே கும்பிடு போட்டு ஓடுகிறவர்களுக்கு மத்தியில், எதையும் எதிர்த்து நிற்கிற வித்தியாசமான கேப்டன் தோனி. இந்தத் தன்னம்பிக்கையும் தைரியமும்தான் அவருடைய வெற்றியின் ரகசியம்.

வெற்றிகளைக் குவிக்கும்போது, தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதும்  தோல்வியடையும்போது, கோபத்தோடு கற்களை வீசுவதும் இந்திய ரசிகர்களின் இயல்பு. கவாஸ்கர், கபில்தேவ் காலத்திலிருந்தே அப்படித்தான். இதற்கு முன்பு என்னதான் சாதனைகளை செய்து குவித்திருந்தாலும் இன்று நீ என்ன செய்தாய் என்பதுதானே இங்கே வேதமந்திரம்?

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஆஸ்திரேலியாவிலும் இங்கிலாந்திலும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி மண்ணைக் கவ்வியபோது, தோனியை கேப்டன் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்கிற குரல்கள், நாடெங்கும் ஒட்டுமொத்தமாக ஒலித்தன. தோனி புன்னகைத்தார்.

இதோ இப்போது ஆஸ்திரேலிய அணியை தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்திவிட்டார் தோனி. உடனே கவாஸ்கர் உணர்ச்சிவசப்பட்டு, ‘2019வரை தோனிதான் இந்திய அணிக்கு கேப்டனாக இருக்கவேண்டும்’ என்றார். அதற்கும் தோனி அதே புன்னகையைத்தான் பதிலாக தருகிறார். வெற்றி, தோல்விகள் இந்தக் கேப்டனை ஒன்றுமே செய்வதில்லை.

‘தோனி எதையும் தாங்கிக்கொள்பவர். தன்னுடைய பொறுப்பினை அவர் எப்போதும் தட்டிக்கழித்ததேயில்லை. தோல்வியின்போது, பயந்து ஓடியவர் இல்லை. தன்னுடைய தவறுகளை மிக தைரியமாக ஒப்புக்கொண்டு, அதை சரிசெய்ய முனைகிறவர். தோனி ஒரு ஸ்பெஷல் டேலண்ட். ஒரு ஸ்பெஷல் மனிதர்’ என்று புகழாரம் சூட்டுகிறார், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சாப்பல்.

2007ம் ஆண்டு இந்தியா வந்திருந்த ஆஸி அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் கும்ப்ளே காயம் காரணமாக விலகிவிட... துணைக் கேப்டனாக இருந்த தோனி கேப்டனாக்கப்பட்டார். அந்தத் தொடரையும் வென்று கொடுத்தார். அதற்குப் பிறகு தோனி கேப்டனான நேரம் பார்த்துதான் கங்குலி, டிராவிட், லட்சுமணன் என இந்திய அணியின் வலுவான பேட்டிங் வரிசை முற்றிலுமாக ஓய்வு பெற்றது. சச்சின் மட்டும்தான் எஞ்சியிருந்தார். அவரும் இரண்டாண்டுகளாக ஒரு சதமடிக்கவே தடுமாறிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் வயது முதிர்ந்துகொண்டிருக்கும் சேவாக் மற்றும் காம்பீர் ஜோடி, சென்ற இடமெல்லாம் சொதப்பியது. ஒரே வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர்கானுக்கும் வயதாகிவிட்டது. பழைய  துடிப்பில்லை.  

இந்தச் சூழலில்தான் அஸ்வின், பிரக்யன் ஓஜா, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் மாதிரியான இளம் பந்துவீச்சாளர்களை உருவாக்குகிறார். இன்னொரு பக்கம் விராத் கோலி,ரவீந்தர ஜடேஜா, புஜாரா, சுரேஷ் ரெய்னா மாதிரியான பேட்ஸ்மேன்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புத்  தந்து உயர்த்துகிறார்.  அதோடு, வெற்றிகளையும் குவிக்கிறார். அதனாலேயே இவ்வெற்றிகள் அசாதாரணமானவையாக ஆகிவிடுகின்றன.

இதுகுறித்து ஒரு பேட்டியில், ‘புதிய இளைஞர்கள் ஓரிரு முறை தோல்வியடைந்து விட்டால், அவர்களை அப்படியே கைவிட்டுவிடக் கூடாது. அவர்கள் மேல் நம்பிக்கை வேண்டும். அந்த நம்பிக்கை ஒருநாள் பலிக்கும், அதுதான் வெற்றியைக் கொடுக்கும்’ என்கிறார் தோனி.

தோனிக்கென்று சில சிறப்பம்சங்கள் உண்டு.

நான் பண்ணுறேன் பார்!

மற்ற வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் தோனி. கேப்டனாவதற்கு முன், அதிரடி ஆட்டத்தை கடைபிடித்தே வந்தாலும்  அதற்குப் பிறகு தன்னுடைய பொறுப்பை உணர்ந்து, பொறுமையான பேட்டிங்கில் அசத்தினார். 5 டெஸ்ட்  போட்டிகளில் 2,729 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 5 சதங்களும் அடங்கும். எப்போதும் ஆறாவது விக்கெட்டுக்கு களமிறங்கும் தோனி, எப்போதும் பந்துவீச்சாளர்களான டெயில் எண்டர்களோடுதான் அதிகமாக பேட்டிங் செய்ய வேண்டியதாயிருக்கும். இருந்தும் தனக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ரன்களைக் குவிக்க அவர் தவறியதேயில்லை. ஒருதினப் போட்டிகளிலும் அவருடைய சராசரி 51.85.

அனைவருக்கும் உண்டு மரியாதை

அணியின் எந்த வீரராக இருந்தாலும் அவருக்கு உரிய மரியாதையை அளிப்பதில் தோனிக்கு நிகரே கிடையாது. கங்குலி ஓய்வு பெறுவதற்கு முன், தன் கடைசி டெஸ்டில் விளையாடுகிறார். அந்த டெஸ்டுக்கு தோனிதான் கேப்டன். இருந்தாலும் கங்குலியை கௌரவிக்கும் விதத்தில், அந்த டெஸ்ட் முடியும் தருவாயில் எதிரணியின் கடைசி விக்கெட் விழுவதற்கு முன், சில ஓவர்கள் மட்டும் கங்குலியை கேப்டனாக இருக்கக் கூறினார். இதைவிட ஒரு சீனியருக்கு எப்படி சிறப்பு செய்ய முடியும்?

வெற்றி உனக்கு, தோல்வி எனக்கு!

ஆஸ்திரேலியாவிலும் இங்கிலாந்திலும் இந்திய அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்தபோது, பத்திரிகையாளர் சந்திப்புகளில் கடுமையான கேள்விகளை தோனி சந்திக்க வேண்டியிருந்தது. தோல்வியடையும் நேரத்தில், எந்தக் குறிப்பிட்ட வீரரையும் இவர்தான் காரணம் என்று சுட்டிக்காட்டியதில்லை. அதோடு, தோல்விக்கு தன்னுடைய அணுகுமுறைதான் காரணம் என்பதையும் ஒப்புக்கொள்ளும் தைரியம் தோனிக்கு இருக்கிறது.

கூல்!

எப்படிப்பட்ட இக்கட்டான சூழலிலும் தன்னுடைய அமைதியை மட்டும் இழக்காதவர் தோனி. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணியின் நல்ல ஸ்கோரை விரட்டியது இந்தியா. ஆரம்பத்திலேயே விக்கெட்டுகள் சரிய... அவரே களமிறங்கி பொறுமையோடு அணியின் ஸ்கோரை உயர்த்தி, இந்தியாவை வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்றதை இந்தியாவே அறியும். அதோடு, தோல்வியின் விளிம்பில் இருந்தாலும் தன்னுடைய அமைதியை மட்டும் இழந்ததேயில்லை தோனி. அதனால்தான் அவரை, ‘கேப்டன் கூல்’ என்று அனைவரும் அழைக்கிறார்கள்.

காத்திருந்து தாக்கு!

தோனியின் பலவீனமாகச் சொல்லப்படுவது, அவர் எதிரணி தவறு செய்யும் வரை காத்திருந்து பிறகுதான் தாக்குவார் என்பது. அதுதான் அவருடைய பலமும் கூட! ஆட்டம் நம்முடைய போக்கில் செல்லவில்லையென்றால், அதை வலிந்து எதையாவது செய்து ஏடாகூடமாய்க்காமல், பொறுமையாகக் காத்திருந்து தாக்குவதுதான் தோனியின் பாணி. அதுதான் அவருக்கு இத்தனை வெற்றிகளையும் பெற்றுத் தந்திருக்கிறது.

அண்மையில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா உடனான ஹைதராபாத் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மைக்கேல்கிளார்க்கும் மேத்யூ வேடும் நான்காவது விக்கெட்டுக்கு களமிறங்கி, கிட்டத்தட்ட 150 ரன்கள் குவித்தனர். தோனி பதட்டமடையவில்லை. காத்திருந்தார் மிகவும் பொறுமையாக... ஸ்கோர் 208 ஆக இருந்தபோது, மேத்யூ வேட் அவுட்டானார். அதற்குப் பிறகுதான் தன்னுடைய அதிரடியை தொடங்கினார். ஃபீல்டிங்கில் மாற்றங்கள் பண்ணினார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. 208க்கு 5 விக்கெட் என்ற நிலையில் இருந்த ஆஸ்திரேலிய அணி 237 ரன்களுக்குள் சுருண்டது. இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

என்னதான் ஆகச் சிறந்த கேப்டனாகவே இருந்தாலும் தோனியின் மீதும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. டெஸ்ட் போட்டிகளில் தவறான அணுகுமுறையை பின்பற்றுகிறார், முன்முடிவுகளோடு வீரர்களை தேர்ந்தெடுக்கிறார், குறிப்பிட்ட சில வீரர்களுக்கு மட்டும் தொடர்ந்து வாய்ப்பு தருவதோடு சீனியர்களை மதிப்பதில்லை, டி20 போட்டிகளுக்குதான் அவர் லாயக்கு, டெஸ்ட்டுக்கு வேண்டாம் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

அண்மையில் ராகுல் டிராவிட் ஒரு பேட்டியில், ‘தோனி டி20 கேப்டன் பதவியை விட்டுவிட வேண்டும். அதை யார் வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ள முடியும். ஆனால், தோனி மாதிரி அனுபவமிக்க சீனியர்தான் டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக இருக்க வேண்டும்’ என்றார்.

அது நிச்சயமாக ஏற்றுக் கொள்ளக்கூடியதே. தோனி தொடர்ச்சியாக டி20 ஒருதினப் போட்டிகள், டெஸ்ட் என மூன்றுவிதப் போட்டிகளுக்கும் கேப்டனாக இருப்பதால், அளவுக்கதிகமான மாற்றங்களை தொடர்ந்து தனக்குள் செய்துகொள்ள வேண்டியதாயிருக்கிறது. போட்டிகளுக்கேற்ப தன்னுடைய அணுகுமுறையை அடிக்கடி மாற்ற வேண்டியதிருக்கிறது. டி20 போட்டிகளுக்கு விராத் கோலி போன்ற இளம் வீரரை கேப்டனாக்கலாம். அது தோனிக்கு கொஞ்சம் ஓய்வு கொடுப்பதாக இருக்கும். அதோடு, ஐபிஎல் மாதிரி போட்டிகளிலும் தோனி ஓய்வெடுக்கலாம்.

தோனியிடம் முன்வைக்கப்படும் இன்னொரு பிரச்சினை, குறிப்பிட்ட சிலருக்கே தொடர்ந்து வாய்ப்பளிக்கிறார் என்பது. அதற்கேற்ப இரண்டு சதங்களை அடித்திருக்கும் ஆஜிங்க்ய ரஹானேவும், மனோஜ் திவாரியும் தொடர்ந்து அணியில் புறக்கணிக்கப் படுகின்றனர். இருவருமே மிகச் சிறந்த வீரர்கள். இருப்பினும் அணியில் அவர்களுக்கான இடத்தை சேவாக்கும் கம்பீரும் யுவராஜ் சிங்கும் ரெய்னாவும் பிடித்து வைத்திருந்தனர். இப்போது அந்த இடம் காலியாகிவிட்டதால், எதிர்காலத்தில் அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கலாம்.

இந்தியாவில் நடை பெறும் போட்டிகளில் மட்டும்தான் அதிக வெற்றிகளைக் குவிக்கிறார், அவரால் கங்கூலி போல வெளிநாடுகளில் வெற்றி பெற முடியாது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், தோனியின் தலைமையில்தான் முதன்முறையாக இந்திய அணி நியூஸிலாந்திலும், மேற்கிந்தியத் தீவுகளிலும் வெற்றியை ருசித்தது.

சென்ற ஆண்டு மட்டும்தான் இங்கிலாந்திலும் ஆஸ்திரேலியாவிலும் இந்திய அணி தோல்வியடைந்தது. நம்முடைய ரிடையர்டான சீனியர்களின் மோசமான ஃபார்மும் நல்ல பந்துவீச்சாளர்கள் காயமடைந்ததும்தான் அதற்கு மிக முக்கியக் காரணம்.

இப்போதுதான் இளம் பந்துவீச்சாளர்களும் பேட்ஸ்மேன்களும் மலர்கின்றனர். அதுவும் மாறிவிடும் என்று உறுதியாக நம்பலாம். அடுத்த நவம்பரில் தென்னாப்ரிக்காவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அங்குதான் தோனி தன் விமர்சகர்களுக்கான பதிலைத் தரமுடியும்.

புயல்களைக் கடந்த தோனி!

மிகச் சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர் தோனி. அவருடைய அப்பா பான்சிங், தொழிற்சாலையொன்றில் பம்ப் ஆபரேட்டராகப் பணியாற்றியவர். பள்ளியில் படிக்கும்போது, மிக மிக சுமாரான மாணவர் தோனி. படிப்பு ஏனோ மண்டையில் ஏறவேயில்லை. ஆனால், விளையாட்டு மிகவும் பிடித்திருந்தது.

அரைமணி நேரம் கிடைத்தாலும் மைதானத்தில்தான் வசிப்பார். கால்பந்து மற்றும் பாட்மிண்டன் என்றால், தோனிக்கு அவ்வளவு பிடிக்கும். எப்போதும் விளையாட்டுதான்.

கால்பந்தாட்டப் போட்டிகளில் கோல்கீப்பராக மாவட்ட அளவிலான போட்டிகளில் விளையாடியுள்ளார். பாட்மிண்டன் போட்டிகளிலும் மாவட்ட அளவில் கலந்துகொண்டு, பரிசுகளை வென்றுள்ளார். அதுவரை அவருக்கு கிரிக்கெட்டில் பெரிய ஆர்வமே இருந்ததில்லை. அவருடைய பள்ளி ஆசிரியர் கே.ஆர்.பானர்ஜி என்பவர், அவருடைய நண்பரின் கிரிக்கெட் கிளப்புக்கு ஒரு விக்கெட் கீப்பர் தேவைப்படுவதாக அறிந்து, தோனியை அனுப்பி வைத்தார்.

தோனியின் சுறுசுறுப்பும் பாயும் திறனும் வளைந்து கொடுக்கிற ஆற்றலும் கால்பந்தினைவிட கிரிக்கெட்டுக்கு ஏற்றது என்று பானர்ஜி நினைத்தார். அதோடு, கிரிக்கெட்டில்தான் அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கருதி, தோனியிடம் கிரிக்கெட் ஆட கேட்டுக்கொண்டார். தோனியும் ஆசிரியரின் சொல்லைத் தட்டமுடியாமல், கையில் கிளவ்ஸோடு விக்கெட் கீப்பராக களமிறங்கினார். தோனிக்கு அப்போது தெரியாது, இதுதான் அவருடைய வாழ்க்கையையே மாற்றப் போகிறதென்பது.

தன் முதல்போட்டியிலேயே மிகச் சிறப்பாக விக்கெட் கீப்பராக செயல்பட்டார் தோனி. இதைப் பார்த்த அந்த அணியின் கோச், தோனியை வெகுவாகப் பாராட்டி, அணியிலேயே தக்கவைத்துக்கொண்டார். அதற்குப் பிறகு விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும் அதிரடியான பேட்ஸ்மேனாகவும் மிகச் சிறந்த கீப்பராகவும் செயல்பட்டு, அனைவருடைய பாராட்டுகளையும் பெற்றார். 1995 தொடங்கி, 1998 வரைக்கும் கமாண்டோ கிரிக்கெட் கிளப் என்கிற அணிக்காக விளையாடினார்.

நல்ல திறமை எங்கிருந்தாலும் அதற்குரிய மரியாதையைப் பெற்றுவிடும். உள்ளூர்ப் போட்டிகளில் தோனியின் திறமையைக் கண்டு, சென்ட்ரல் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் எனும் நிறுவனம் அவருக்கு ஸ்பான்சர் செய்ய முன்வந்தது. தோனி அப்போது முதல்தரப் போட்டிகளில் கூட விளையாட ஆரம்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்குப் பிறகு 19 வயதிற்குட்பட்டோருக்கான பீகார் அணியில் இடம் பிடித்தார் தோனி. அந்த அணிக்காக சிறப்பாக விளையாடி, கூச் பேகர் டிராபியின் ஃபைனல் வரைக்கும் அழைத்துச் சென்றார். அவருடைய அதிரடி ஆட்டம், ரஞ்சிக் கோப்பைக்கான பீகார் அணியில் இடம் பிடித்துக் கொடுத்தது. அதோடு, ரயில்வேயில் வேலையும் கிடைத்தது. 2001ம் ஆண்டு தொடங்கி, 2003 வரை காரக்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கலெக்டராகப் பணியாற்றினார் தோனி. கிடைத்த வேலையை ஒழுங்காக செய்ததோடு, கிரிக்கெட்டையும் விட்டுவிடவில்லை.

2003 மற்றும் 2004ம் ஆண்டு ரஞ்சிப் போட்டிகளில் முழுமூச்சுடன் பீகார் அணிக்காக விளையாடினார். இதையடுத்து அந்த நேரத்தில் ஜிம்பாப்வே சென்ற இந்திய அணிக்காக விக்கெட் கீப்பராக தேர்வானார் தோனி. ஜிம்பாப்வேயுடனான ஒரு டெஸ்ட் போட்டியில் ஏழு கேட்ச், நான்கு ஸ்டம்பிங் என அசத்தினார். அதோடு, பேட்டிங்கிலும் அரை சதமடித்தார். இதையடுத்து, பாகிஸ்தான் ‘ஏ’ அணியுடனான போட்டிகளுக்கு தேர்வானார். அதில் ஒரு சதம், இரண்டு இரட்டை சதமென விளாசித் தள்ளினார்.

நயன்மோங்கியாவுக்குப் பிறகு இந்திய அணிக்கு நல்ல விக்கெட் கீப்பர் இல்லாமல் அல்லாடிக்கொண்டிருந்த போது, 21வயது இளைஞரான தோனியின் அதிரடி ஆட்டம் நம் தேர்வுக்குழு மற்றும் அப்போதைய இந்திய கேப்டன் கங்குலியை வெகுவாக ஈர்த்தது. உடனடியாக வங்காள தேசத்துக்கு எதிரான போட்டிக்கு தோனி தேர்வானார். இந்திய அணிக்காக விளையாடும் கனவு பலித்தது.

தனது ஐந்தாவது போட்டியிலேயே வலுவான பாகிஸ்தான் அணிக்கு எதிராக 148 ரன்களை விளாசித் தள்ளினார் தோனி! கிரிக்கெட் உலகமே யாருப்பா இந்தப் பையன் எனத் திரும்பிப் பார்த்தது. சில போட்டிகளுக்குப் பிறகு இலங்கை அணிக்கெதிராக 183 ரன்களைக் குவித்தார். இது இந்திய அணியில் அவருடைய இடத்தினை உறுதிசெய்தது. இன்றுவரை அவர் அடித்த 183தான் உலக அளவில் விக்கெட் கீப்பராக ஒரு பேட்ஸ்மேன் அடித்த அதிகபட்ச ஸ்கோர் என்கிற சாதனையாகத் திகழ்கிறது.

ஐபிஎல்லிலும் வெற்றிதான்

இந்திய அணிக்கு மட்டுமல்ல, ஐபிஎல் போட்டிகளில் நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் தோனிதான் கேப்டன்.  இரண்டு முறை சென்னை அணிக்கு கோப்பையைப் பெற்றுத்தந்து, சென்னைக்கு பெருமை தேடித் தந்திருக்கிறார்.

தோனியிடம் கற்றுக்கொள்ள 10 தலைமைப் பண்புகள்
  • தன்னுடைய திறமையை முழுமையாக வெளிக்காட்டி, அணியிலிருப்பவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பது.
  • வெற்றியில் அமைதியாகவும் தோல்வியில் கலக்கமில்லாமலும் இருப்பது.
  • உயர்பதவியில் இருந்தாலும் அடக்கமாக இருப்பது.
  • அணியில் ஒவ்வொருவரையும் சமமாக நடத்துவது.
  • இளைஞர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பது.
  • புதிதாக செய்துபார்க்க நினைப்பவர்களை ஊக்கப்படுத்துவது.
  • தோற்பவர்கள்மேல், நம்பிக்கை வைத்து வாய்ப்பளிப்பது.
  • வெற்றியை அணியிலிருக்கிற அனைவருக்கும் பகிர்வது, அதைப் பொதுவில் சொல்வது.
  • அணியின் ஒவ்வொருவர் மீதும் நம்பிக்கை வைப்பது.
  • சிக்கலான நேரங்களிலும் தடுமாறாமல் உறுதியான முடிவுகளை எடுப்பது.

ஹெலிகாப்டர் ஷாட்!

தோனி தன் பேட்டைச் சுற்றி, சிக்ஸராக அடிக்கிற ஹெலிகாப்டர் ஷாட் அவருடைய ஸ்பெஷல். தோனியிடம் இதுகுறித்துப் பேசும்போது, ‘சின்ன வயசுல டென்னிஸ் பால்ல, ஊர் மைதானத்துல கிரிக்கெட் ஆடுவோம். அப்போது கத்துக்கிட்டதுதான் இந்த ஹெலிகாப்டர் ஷாட். இதை எனக்கு கத்துக் குடுத்தது, என்னுடைய பள்ளி நண்பன்’ என்கிறார்.
 

வியாழன், 21 மார்ச், 2013

பெண்களுக்கு நீதி

வேறுபாடுகள் நிறைந்த நமது சமூக அமைப்பில் பொதுவான இழிவுகள் ஒருபுறமிருக்க, எல்லாக் குடும்பங்களிலும் எப்போதும் இரண்டாம் குடிமக்களாகவே பெண்களும் பெண் குழந்தைகளும் கருதப்படுகின்றனர். பெண்ணைப் போற்றி முதன்மைப்படுத்தி வளர்க்கும் ஏதாவது ஒரு குடும்பத்தைத் தேடிப்பிடித்து உதாரணமாகக் காட்டலாமே தவிர, எல்லாக் குடும்பங்களிலும் பெண் குழந்தைகள் ஆற்றல் பெறும் விழிப்புணர்வுடன் வளர்க்கப்படுகிறார்களா என்றால், நிச்சயமாக இல்லை. வீரலட்சுமி, தைரியலட்சுமி, தனலட்சுமி, மகாலட்சுமி, ராஜலட்சுமி என்றெல்லாம் பெண்களுக்கு பெயர் சூட்டுகிறார்கள். ஆனால், உண்மையிலேயே அந்தக் குழந்தைகள் அப்படிப்பட்ட லட்சுமிகளாக வளர்க்கப்படுகிறார்களா என்றால் இல்லை. அந்தக் குணாம்சங்கள் எல்லாம் பெயரில் மட்டும் இருந்தால் போதும் என்று நினைக்கின்றனர்.

பெரும்பான்மையான குடும்பங்களில் இரண்டாம்பட்சமாகப் பெண்கள் இருப்பதையே ஆண்கள் மறைமுகமாக விரும்புகின்றனர். குடும்பத் தலைவர்களின்  இந்த மனநிலை, பெண் குழந்தைகள் வளர்ப்பினிலும் பிரதிபலிக்கிறது.

பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், இந்தந்த வேலைகளை பெண்கள் மட்டும்தான் செய்ய வேண்டும் என்கிற ‘நியதிகள்’ பெண் குழந்தைகளின் சிறிய வயதிலேயே கற்பிக்கப்படுகின்றன. கிராமங்களில் பெற்றோர்கள் தினமும் அதிகாலையில் கூலித்தொழிலுக்குச் சென்றுவிடுவார்கள். வீட்டில் உள்ள பெண் குழந்தைளோ பாத்திரம் துலக்கி, வீடு பெருக்கி, தண்ணீர் பிடித்து வைத்து, துணி துவைத்து, சிலர் தம்பிப் பாப்பாக்களை தூக்கிச் சென்று அங்கன்வாடியில் விட்டுவிட்டு, பிறகுதான் பள்ளிக்குச் செல்கிறார்கள். ‘வீட்டில் நீ இவ்வளவு வேலைகள் செய்கிறாயே, உன் அண்ணன் என்னென்ன வேலைகள் செய்வான்?’ என்று 3ம் வகுப்பு படிக்கும் என்னுடைய மாணவி சந்தியாவிடம் கேட்டேன். ‘அவன் சாப்பிடுவான், விளையாடுவான், தூங்குவான், அப்புறம் கொஞ்ச நேரம் படிப்பான். அதைக்கூட ஒழுங்கா செய்ய மாட்டான்’ என்று சிரித்துக்கொண்டே பதில் சொன்னாள் சந்தியா. பெரும்பாலான வீடுகளில் பெண் குழந்தைகள் வளரும் விதம் இதுதான்.

ஏழ்மையான குடும்பங்களில் உள்ள பெண் குழந்தைகளுக்கு வீட்டு வேலைதான் முதன்மையானது. அதற்குப் பிறகுதான் படிப்பு மற்றதெல்லாம். வீட்டு வேலைகளில் பெண் குழந்தைகள் தவறிழைக்கும்போது, ‘நீயெல்லாம்  எங்க போயி மொத்துப்படப் போறியோ?’ என்பது போன்ற வசவுகள் சகஜமானது. ‘ஆணுக்கு அடங்கி வாழ வேண்டும்’ என்கிற சிந்தனை ஊட்டி வளர்க்கப்படும் பருவமும் இதுதான்.  

ஆண் குழந்தையை வளர்ப்பது, படிக்க வைப்பது என எல்லா செலவினங்களும் முதலீடாகவே பார்க்கப்படுகின்றன. ஆனால், பெண் வளர்ப்பு, படிப்பு மற்றும் அவளது திருமணம் என அனைத்தும் செலவினங்களாகத்தான் பார்க்கப்படுகின்றன. காலம்காலமாக நிலவி வரும் இந்தப் பாகுபாட்டுச் சூழலைக் கிராமப்புறங்களில் மட்டுமின்றி, நகர்ப்புறங்களிலும் பார்க்க முடிகிறது.

பெண் குழந்தைகள் எப்போதும் குழந்தைகளாகவே பார்க்கப்படுவதில்லை. அவர்களும் கூட பெண்களாகத்தான் பார்க்கப்படுகிறார்கள். எனவேதான் தன் வயதொத்த சிறுவர்களோடு வெளியில் சென்று விளையாடுவதற்குக் கூட அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால், விளையாட்டுப்பருவம் என்பதே பெண் குழந்தைகளுக்கு இல்லாமல் போய்விடுகிறது. பழமொழிகளும், உவமைகளும் அவர்களை ஒருபோதும் தங்களை கௌரவத்திற்குரிய மனிதப்பிறவி என்பதைக்கூட உணரவிடாமல் பார்த்துக்கொள்கின்றன.

குழந்தைத் திருமணம் என்பது சட்டவிரோதம் என்றாலும்கூட, அந்த சமூகக்கொடுமை நாட்டின் ஒருசில பகுதிகளில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.13 வயது, 15 வயது பெண் குழந்தைகளை 30 வயது, 40 வயது ஆண்களுக்கு திருமணம் செய்துகொடுக்கும் அவலம் இன்னும் நீடிக்கத்தான் செய்கிறது. புத்தகப்பையை சுமக்க வேண்டிய வயதில், வயிற்றில் கருவைச் சுமக்கும் பரிதாப நிலைக்கு அக்குழந்தைகள் தள்ளப்படுகிறார்கள். குழந்தைத் திருமணத்தால் பலரின் வாழ்க்கை, பாதியிலே முடிந்துவிடுகிறது.

கடைசிக் காலத்தில் நமக்கு கஞ்சி ஊற்றுபவர்கள் ஆண் குழந்தைகள் என்ற நம்பிக்கை இன்றும் உள்ளது. ஆனால், வயதான பெற்றோர்களைப் பாதுகாப்பது ஆண் பிள்ளைகளைக் காட்டிலும் பெண் பிள்ளைகளே அதிகம் என்பது இன்றைய யதார்த்தம்.
வேறுபாடுகள் நிறைந்த நமது சமூக அமைப்பில் பொதுவான இழிவுகள் ஒருபுறமிருக்க, எல்லாக் குடும்பங்களிலும் எப்போதும் இரண்டாம் குடிமக்களாகவே பெண்களும் பெண் குழந்தைகளும் கருதப்படுகின்றனர். பெண்ணைப் போற்றி முதன்மைப்படுத்தி வளர்க்கும் ஏதாவது ஒரு குடும்பத்தைத் தேடிப்பிடித்து உதாரணமாகக் காட்டலாமே தவிர, எல்லாக் குடும்பங்களிலும் பெண் குழந்தைகள் ஆற்றல் பெறும் விழிப்புணர்வுடன் வளர்க்கப்படுகிறார்களா என்றால், நிச்சயமாக இல்லை. வீரலட்சுமி, தைரியலட்சுமி, தனலட்சுமி, மகாலட்சுமி, ராஜலட்சுமி என்றெல்லாம் பெண்களுக்கு பெயர் சூட்டுகிறார்கள். ஆனால், உண்மையிலேயே அந்தக் குழந்தைகள் அப்படிப்பட்ட லட்சுமிகளாக வளர்க்கப்படுகிறார்களா என்றால் இல்லை. அந்தக் குணாம்சங்கள் எல்லாம் பெயரில் மட்டும் இருந்தால் போதும் என்று நினைக்கின்றனர்.

பெரும்பான்மையான குடும்பங்களில் இரண்டாம்பட்சமாகப் பெண்கள் இருப்பதையே ஆண்கள் மறைமுகமாக விரும்புகின்றனர். குடும்பத் தலைவர்களின்  இந்த மனநிலை, பெண் குழந்தைகள் வளர்ப்பினிலும் பிரதிபலிக்கிறது.

பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், இந்தந்த வேலைகளை பெண்கள் மட்டும்தான் செய்ய வேண்டும் என்கிற ‘நியதிகள்’ பெண் குழந்தைகளின் சிறிய வயதிலேயே கற்பிக்கப்படுகின்றன. கிராமங்களில் பெற்றோர்கள் தினமும் அதிகாலையில் கூலித்தொழிலுக்குச் சென்றுவிடுவார்கள். வீட்டில் உள்ள பெண் குழந்தைளோ பாத்திரம் துலக்கி, வீடு பெருக்கி, தண்ணீர் பிடித்து வைத்து, துணி துவைத்து, சிலர் தம்பிப் பாப்பாக்களை தூக்கிச் சென்று அங்கன்வாடியில் விட்டுவிட்டு, பிறகுதான் பள்ளிக்குச் செல்கிறார்கள். ‘வீட்டில் நீ இவ்வளவு வேலைகள் செய்கிறாயே, உன் அண்ணன் என்னென்ன வேலைகள் செய்வான்?’ என்று 3ம் வகுப்பு படிக்கும் என்னுடைய மாணவி சந்தியாவிடம் கேட்டேன். ‘அவன் சாப்பிடுவான், விளையாடுவான், தூங்குவான், அப்புறம் கொஞ்ச நேரம் படிப்பான். அதைக்கூட ஒழுங்கா செய்ய மாட்டான்’ என்று சிரித்துக்கொண்டே பதில் சொன்னாள் சந்தியா. பெரும்பாலான வீடுகளில் பெண் குழந்தைகள் வளரும் விதம் இதுதான்.

ஏழ்மையான குடும்பங்களில் உள்ள பெண் குழந்தைகளுக்கு வீட்டு வேலைதான் முதன்மையானது. அதற்குப் பிறகுதான் படிப்பு மற்றதெல்லாம். வீட்டு வேலைகளில் பெண் குழந்தைகள் தவறிழைக்கும்போது, ‘நீயெல்லாம்  எங்க போயி மொத்துப்படப் போறியோ?’ என்பது போன்ற வசவுகள் சகஜமானது. ‘ஆணுக்கு அடங்கி வாழ வேண்டும்’ என்கிற சிந்தனை ஊட்டி வளர்க்கப்படும் பருவமும் இதுதான்.  

ஆண் குழந்தையை வளர்ப்பது, படிக்க வைப்பது என எல்லா செலவினங்களும் முதலீடாகவே பார்க்கப்படுகின்றன. ஆனால், பெண் வளர்ப்பு, படிப்பு மற்றும் அவளது திருமணம் என அனைத்தும் செலவினங்களாகத்தான் பார்க்கப்படுகின்றன. காலம்காலமாக நிலவி வரும் இந்தப் பாகுபாட்டுச் சூழலைக் கிராமப்புறங்களில் மட்டுமின்றி, நகர்ப்புறங்களிலும் பார்க்க முடிகிறது.

பெண் குழந்தைகள் எப்போதும் குழந்தைகளாகவே பார்க்கப்படுவதில்லை. அவர்களும் கூட பெண்களாகத்தான் பார்க்கப்படுகிறார்கள். எனவேதான் தன் வயதொத்த சிறுவர்களோடு வெளியில் சென்று விளையாடுவதற்குக் கூட அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால், விளையாட்டுப்பருவம் என்பதே பெண் குழந்தைகளுக்கு இல்லாமல் போய்விடுகிறது. பழமொழிகளும், உவமைகளும் அவர்களை ஒருபோதும் தங்களை கௌரவத்திற்குரிய மனிதப்பிறவி என்பதைக்கூட உணரவிடாமல் பார்த்துக்கொள்கின்றன.

குழந்தைத் திருமணம் என்பது சட்டவிரோதம் என்றாலும்கூட, அந்த சமூகக்கொடுமை நாட்டின் ஒருசில பகுதிகளில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.13 வயது, 15 வயது பெண் குழந்தைகளை 30 வயது, 40 வயது ஆண்களுக்கு திருமணம் செய்துகொடுக்கும் அவலம் இன்னும் நீடிக்கத்தான் செய்கிறது. புத்தகப்பையை சுமக்க வேண்டிய வயதில், வயிற்றில் கருவைச் சுமக்கும் பரிதாப நிலைக்கு அக்குழந்தைகள் தள்ளப்படுகிறார்கள். குழந்தைத் திருமணத்தால் பலரின் வாழ்க்கை, பாதியிலே முடிந்துவிடுகிறது.

கடைசிக் காலத்தில் நமக்கு கஞ்சி ஊற்றுபவர்கள் ஆண் குழந்தைகள் என்ற நம்பிக்கை இன்றும் உள்ளது. ஆனால், வயதான பெற்றோர்களைப் பாதுகாப்பது ஆண் பிள்ளைகளைக் காட்டிலும் பெண் பிள்ளைகளே அதிகம் என்பது இன்றைய யதார்த்தம்.
வேறுபாடுகள் நிறைந்த நமது சமூக அமைப்பில் பொதுவான இழிவுகள் ஒருபுறமிருக்க, எல்லாக் குடும்பங்களிலும் எப்போதும் இரண்டாம் குடிமக்களாகவே பெண்களும் பெண் குழந்தைகளும் கருதப்படுகின்றனர். பெண்ணைப் போற்றி முதன்மைப்படுத்தி வளர்க்கும் ஏதாவது ஒரு குடும்பத்தைத் தேடிப்பிடித்து உதாரணமாகக் காட்டலாமே தவிர, எல்லாக் குடும்பங்களிலும் பெண் குழந்தைகள் ஆற்றல் பெறும் விழிப்புணர்வுடன் வளர்க்கப்படுகிறார்களா என்றால், நிச்சயமாக இல்லை. வீரலட்சுமி, தைரியலட்சுமி, தனலட்சுமி, மகாலட்சுமி, ராஜலட்சுமி என்றெல்லாம் பெண்களுக்கு பெயர் சூட்டுகிறார்கள். ஆனால், உண்மையிலேயே அந்தக் குழந்தைகள் அப்படிப்பட்ட லட்சுமிகளாக வளர்க்கப்படுகிறார்களா என்றால் இல்லை. அந்தக் குணாம்சங்கள் எல்லாம் பெயரில் மட்டும் இருந்தால் போதும் என்று நினைக்கின்றனர்.

பெரும்பான்மையான குடும்பங்களில் இரண்டாம்பட்சமாகப் பெண்கள் இருப்பதையே ஆண்கள் மறைமுகமாக விரும்புகின்றனர். குடும்பத் தலைவர்களின்  இந்த மனநிலை, பெண் குழந்தைகள் வளர்ப்பினிலும் பிரதிபலிக்கிறது.

பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், இந்தந்த வேலைகளை பெண்கள் மட்டும்தான் செய்ய வேண்டும் என்கிற ‘நியதிகள்’ பெண் குழந்தைகளின் சிறிய வயதிலேயே கற்பிக்கப்படுகின்றன. கிராமங்களில் பெற்றோர்கள் தினமும் அதிகாலையில் கூலித்தொழிலுக்குச் சென்றுவிடுவார்கள். வீட்டில் உள்ள பெண் குழந்தைளோ பாத்திரம் துலக்கி, வீடு பெருக்கி, தண்ணீர் பிடித்து வைத்து, துணி துவைத்து, சிலர் தம்பிப் பாப்பாக்களை தூக்கிச் சென்று அங்கன்வாடியில் விட்டுவிட்டு, பிறகுதான் பள்ளிக்குச் செல்கிறார்கள். ‘வீட்டில் நீ இவ்வளவு வேலைகள் செய்கிறாயே, உன் அண்ணன் என்னென்ன வேலைகள் செய்வான்?’ என்று 3ம் வகுப்பு படிக்கும் என்னுடைய மாணவி சந்தியாவிடம் கேட்டேன். ‘அவன் சாப்பிடுவான், விளையாடுவான், தூங்குவான், அப்புறம் கொஞ்ச நேரம் படிப்பான். அதைக்கூட ஒழுங்கா செய்ய மாட்டான்’ என்று சிரித்துக்கொண்டே பதில் சொன்னாள் சந்தியா. பெரும்பாலான வீடுகளில் பெண் குழந்தைகள் வளரும் விதம் இதுதான்.

ஏழ்மையான குடும்பங்களில் உள்ள பெண் குழந்தைகளுக்கு வீட்டு வேலைதான் முதன்மையானது. அதற்குப் பிறகுதான் படிப்பு மற்றதெல்லாம். வீட்டு வேலைகளில் பெண் குழந்தைகள் தவறிழைக்கும்போது, ‘நீயெல்லாம்  எங்க போயி மொத்துப்படப் போறியோ?’ என்பது போன்ற வசவுகள் சகஜமானது. ‘ஆணுக்கு அடங்கி வாழ வேண்டும்’ என்கிற சிந்தனை ஊட்டி வளர்க்கப்படும் பருவமும் இதுதான்.  

ஆண் குழந்தையை வளர்ப்பது, படிக்க வைப்பது என எல்லா செலவினங்களும் முதலீடாகவே பார்க்கப்படுகின்றன. ஆனால், பெண் வளர்ப்பு, படிப்பு மற்றும் அவளது திருமணம் என அனைத்தும் செலவினங்களாகத்தான் பார்க்கப்படுகின்றன. காலம்காலமாக நிலவி வரும் இந்தப் பாகுபாட்டுச் சூழலைக் கிராமப்புறங்களில் மட்டுமின்றி, நகர்ப்புறங்களிலும் பார்க்க முடிகிறது.

பெண் குழந்தைகள் எப்போதும் குழந்தைகளாகவே பார்க்கப்படுவதில்லை. அவர்களும் கூட பெண்களாகத்தான் பார்க்கப்படுகிறார்கள். எனவேதான் தன் வயதொத்த சிறுவர்களோடு வெளியில் சென்று விளையாடுவதற்குக் கூட அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால், விளையாட்டுப்பருவம் என்பதே பெண் குழந்தைகளுக்கு இல்லாமல் போய்விடுகிறது. பழமொழிகளும், உவமைகளும் அவர்களை ஒருபோதும் தங்களை கௌரவத்திற்குரிய மனிதப்பிறவி என்பதைக்கூட உணரவிடாமல் பார்த்துக்கொள்கின்றன.

குழந்தைத் திருமணம் என்பது சட்டவிரோதம் என்றாலும்கூட, அந்த சமூகக்கொடுமை நாட்டின் ஒருசில பகுதிகளில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.13 வயது, 15 வயது பெண் குழந்தைகளை 30 வயது, 40 வயது ஆண்களுக்கு திருமணம் செய்துகொடுக்கும் அவலம் இன்னும் நீடிக்கத்தான் செய்கிறது. புத்தகப்பையை சுமக்க வேண்டிய வயதில், வயிற்றில் கருவைச் சுமக்கும் பரிதாப நிலைக்கு அக்குழந்தைகள் தள்ளப்படுகிறார்கள். குழந்தைத் திருமணத்தால் பலரின் வாழ்க்கை, பாதியிலே முடிந்துவிடுகிறது.

கடைசிக் காலத்தில் நமக்கு கஞ்சி ஊற்றுபவர்கள் ஆண் குழந்தைகள் என்ற நம்பிக்கை இன்றும் உள்ளது. ஆனால், வயதான பெற்றோர்களைப் பாதுகாப்பது ஆண் பிள்ளைகளைக் காட்டிலும் பெண் பிள்ளைகளே அதிகம் என்பது இன்றைய யதார்த்தம்.
கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்த தில்லி மாணவி நிர்பயா, ஒருதலைக் காதலால் திராவக வீச்சுக்கு ஆளாகி துடிதுடித்து இறந்த வினோதினி, வித்யா... சமீபத்தில் நமது ஒட்டுமொத்த மனசாட்சியையும் உலுக்கி எடுத்த சம்பவங்கள் இவை.

கோயமுத்தூரில் தந்தை மற்றும் தாத்தா வயதையொத்த கயவர்களால் கற்பழிக்கப்பட்ட 15 வயது சிறுமி, வரதட்சணைக் கொடுமையால் வலுக்கட்டாயமாக திராவகம் குடிக்க வைக்கப்பட்டு உயிரிழந்த வாணியம்பாடி கோமதி. இப்படி ஒவ்வொரு நாளும் பெண்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சித்ரவதை செய்யப்படும் சம்பவங்கள் வெளிவந்து, நமது இதயத்தை அதிரச் செய்கின்றன. ஆனால், இவையெல்லாம் ஊடக வெளிச்சத்தில் நம் கண்களுக்குத் தெரியும் சில உதாரணங்கள்தான். இன்னும் எத்தனை எத்தனை பெண்கள், சிறுமிகள், மூதாட்டிகள், குடும்ப மற்றும் சமுதாய வன்முறைகளை மௌனமாக தாங்கிக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்! நமது ஊர்களில், தெருக்களில், நமது அண்டை வீடுகளில்...ஏன் சற்று உற்று நோக்குங்கள்...நமது இல்லங்களில்கூட...

சமீபத்தில் என் நெருங்கிய தோழி ஒருவர், இரண்டாவது முறையாக பிரசவித்தார். கர்ப்பம் தரித்த நாள் முதல் ஒவ்வொரு நாளும் மனதளவில் அவர் அனுபவித்த மனஉளைச்சல் சொல்லி மாளாது. காரணம், முதலில் பிறந்தது பெண் குழந்தை. இரண்டாவதும் பெண் குழந்தையாகப் பிறந்து விட்டால், கணவரும் மாமியாரும் என்ன சொல்வார்களோ என்ற பயம். என் தோழியும் அவள் அம்மாவும் வேண்டாத தெய்வமில்லை. ஆனால், இயற்கையின் கணக்கை யாரால் மாற்ற முடியும்? இரண்டாவதும் அழகான பெண் குழந்தை பிறந்தது. மருத்துவர் வந்து அறிவித்ததும் பிரசவ வார்டின் வெளியே காத்திருந்தவர்களின் முகங்கள் ஒரு நொடி சுண்டியது. தனது வருகை, உறவுகளின் மத்தியில் எவ்வளவு பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அறியாமல் உறங்கிக் கொண்டிருந்தது அந்தப் பிஞ்சு.

கருவுற்ற காலத்தில் ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்று தீர்மானிப்பது தந்தையின் குரோமசோம்கள்தான் என்பது படித்தவர்கள் அறிந்ததே. ஆனாலும் ஆண் குழந்தையைத்தான் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று பெண்ணை நிர்பந்திப்பதும் மாறாக பெண் குழந்தை பிறந்து விட்டால், அந்தப் பெண்ணை குற்றவாளியைப்போல நடத்துவதும் படித்தவர்கள் மத்தியிலும் நடக்கிற ஒரு பெரிய கொடுமை.

பெண்களுக்கு ஆதரவாக எத்தனையோ சட்டங்கள் நமது நாட்டில் உள்ளன. ஆனாலும் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் தேசிய குற்றப்பதிவுகளின் துறையின் (nationala records bureau) புள்ளி விவரங்கள், இந்தியாவில் 22 நிமிடங்களுக்கு ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள், ஒவ்வொரு 58 நிமிடங்களிலும் ஒரு பெண் வரதட்சணைக் கொடுமையால் உயிரிழக்கிறாள் என்று சொல்கிறது. Reuter நிறுவனம் நடத்திய ஓர் ஆய்வில், பெண்கள் வசிக்கத் தகுதியில்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் உள்ளதாகக் கூறுகிறது.

சட்டங்கள் கடுமையாக இருந்தாலும் பெண்களைப் பற்றிய பார்வை ஓர் ஆணுக்கு எங்கிருந்து முதலில் உருவாகிறது? வீடுகளில் இருந்துதானே?

ஓர் ஆண் குழந்தை வளரும்போது தன் தந்தை, தாயை எப்படி நடத்துகிறார் என்று பார்க்கிறான். காலையில் தந்தை ஹாலில் பேப்பர் படித்துக்கொண்டிருக்க...வீட்டு வேலைகளை அரக்கப் பரக்கச் செய்து, கணவனை அலுவலகத்திற்கும், பிள்ளைகளைப் பள்ளிக்கும் அனுப்புவதிலிருந்து இரவு கடைசி ஆளாக உறங்கச் செல்லும் தாயை அந்த ஆண் குழந்தை எப்படிப் பார்ப்பான்? எத்தனை வீடுகளில் பெண்கள், தங்கள் கணவனால் மரியாதையுடன் நடத்தப்படுகிறார்கள்? மனைவியை அடிப்பது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாகத்தானே இன்னும் இங்கு இருக்கிறது? இதைப் பார்த்தே வளரும் சிறுவன், பெண் என்பவள் அவனுக்கு அடங்கிப் போக வேண்டியவள் என்றுதானே நினைப்பான்? ஒரு பெண்ணை தாயாக, சகோதரியாக, தோழியாக, சக மனுஷியாக மதித்து நடக்கும் பண்பை முதலில் வீட்டிலும் அடுத்து, பள்ளியிலும் கற்றுத்தர முடியும்.

எனது மகள் ஒன்றாம் வகுப்பு படித்தபோது, ஒருநாள் திடீரென்று சாப்பிடாமல் முரண்டு பிடிக்க ஆரம்பித்தாள். ‘இனிமே நீங்க வேலைக்குப் போகக் கூடாது. கிச்சன்ல நீங்கதான் சமைக்கணும்’ என்று என்னிடம் பிடிவாதம் பிடித்தாள். ‘ஏன் சமையல்காரப் பெண் நன்றாகத்தானே  சமைக்கிறாள், என்ன பிரச்சினை?’ என்று கேட்டதற்கு, எதுவும் சொல்லாமல் ஒரே அழுகை. தொடர்ந்து சில நாட்கள் இப்படியே செய்தாள். ஒருநாள் அவளை உட்கார வைத்து, மெதுவாகப் பேசிய போதுதான் அழுகைக்கான காரணம் புரிந்தது. ‘எங்க மிஸ் சொன்னாங்க... மம்மி குக்ஸ் இன் தி கிச்சன், டாடி கோஸ் டு ஆபீஸ். எல்லா வீட்லயும் மம்மி, வீட்ல இருந்து குக்தான் பண்றாங்க போலிருக்கு. இப்ப புரியுதா, நான் ஏன் உங்களை ஆபீஸ் போக வேண்டாம்ன்னு சொன்னேன்னு?’ என்றாள்.

நான் சிரித்தபடி, ‘அப்படி சொல்லிக் கொடுத்த மிஸ்கூட பணிக்குச் செல்லும் ஒரு பெண்தானே? அத்துடன்  சமையல் என்பது ஆண், பெண் இரண்டு பேரும் செய்யக் கூடிய வேலைதான். ஹோட்டல்களில் பெரும்பாலும் ஆண்கள்தான் சமைக்கிறார்கள்’ என்றேன். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவள் சமாதானம் ஆகவில்லை. ‘எங்க மிஸ் கரெக்டாதான் சொல்வாங்க’ என்றாள்.

விண்வெளி வீராங்கனையாக, பிரதமராக, முதல்வராக, பன்னாட்டு நிறுவனங்களின் தலைவியாக பெண்கள் பரிணமித்தபோதும் இன்னும் நம் பாடப் புத்தகங்களில் அம்மா என்பவள் சமைத்துக்கொண்டு மட்டும்தான் இருக்கிறாள்.

டி.வி. சீரியல்களும் சினிமாக்களும் எந்த அளவிற்கு குழந்தைகளையும் இளைஞர்களையும் பாதிக்கிறது என்பதை அன்றாட வாழ்வில் கண்கூடாகப் பார்க்கலாம். காமெடி என்ற பெயரில் பெண்களை கிண்டல் செய்து பேசுவது, பாடுவது, ஆபாசமாக வர்ணிப்பது என்று பெண்களை  பாலியல் பிம்பங்களாகவும் காட்சிப் பொருளாகவும்தான் ஊடகங்கள் காட்டுகின்றன. எனக்குத் தெரிந்த ஒரு 10 வயது சிறுவன், சென்னையின் பிரதான அடையாளமாகக் கருதப்படும் புகழ்பெற்ற பள்ளியில் படிக்கிறான். ஒருநாள் என்னிடம், தன்னுடன் படிக்கும் மாணவிகளைப் பற்றி, ‘கேர்ள்ஸ் எல்லாம் ஒரே அறுவை ஆன்ட்டி. அவங்களுக்கு என்ன தெரியும்? நாங்க கேர்ள்ஸை ஃப்ரண்ட்ஸா சேர்க்க மாட்டோம். அவங்களைச் சீண்டி அழ வைபோம்’ என்றான். பெண் குழந்தைகளை சீண்ட வேண்டும் என்ற எண்ணத்தை 10 வயது சிறுவனுக்கு விதைத்தது யார்? தினமும் அவன் பார்க்கும் டி.வி. சீரியல்களும் சினிமாக்களும்தான்.

வீட்டில் பெண்களை மதிக்கத் தெரிந்தவன் சமுதாயத்திலும் அதே மாதிரி மனோபாவத்துடன்தான் நடப்பான். தன்னை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டும் என்று எந்தப் பெண்ணும் ஆசைப்படவில்லை. சக மனுஷியாக மரியாதையுடன், புரிதலுடன் நடத்தப்பட வேண்டும் என்றுதான் விரும்புகிறாள். பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க எத்தனை கடுமையான சட்டங்கள் கொண்டு வந்தாலும் உண்மையான, ஆரோக்கியமான மாற்றம் என்பது நமது இல்லங்களிலிருந்துதான் தொடங்க வேண்டும். னியா இருக்கீங்களா? இது ஃபேமிலிக்குனு சொன்னாங்க...கேட்டு சொல்லட்டா?’ மண விலக்குப் பெற்ற அல்லது மணம் புரிந்துகொள்ளாமல், தனித்து வாழ்வதைத் தேர்ந்தெடுத்துக்கொண்ட பெண்கள், வாடகைக்கு வீடு தேடும்போது பலமுறை கேட்கும் பரிச்சயமான குரல் இது.  ஒரு பெண்ணைத் தனி ஒரு மனுஷியாகப் பார்க்கும் கண், இந்த சமூகத்திற்கு இல்லை. அதற்குக் காரணம், அதன் அடிமனதில் இடையறாது ஊற்றெடுத்துக் கொண்டிருக்கும் பெண் மீதான பாலியல் எண்ணங்கள்.

ஒரு பெண், ஆண் உறவுகளை விலக்கிவிட்டுத் தனித்து வாழத் தீர்மானித்தால், அதை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பவர்கள்தான் அதிகம். ஏன் அவள் தனித்திருக்கிறாள்? காதல் தோல்வியோ? விவாகரத்தோ? ஆதரவற்ற அநாதையோ? ஆண் நண்பர்களை சந்திப்பதற்கு வசதியாகவோ என்ற கேள்விகளை மனதில் வைத்துக் கொண்டுதான் ஆண்கள் அவர்களை எதிர்கொள்வார்கள். அது படித்த பெரிய அதிகாரியானாலும் சரி, பக்கத்து வீட்டில் வசிக்கும் குடும்பஸ்தரானாலும் சரி.  

தனித்திருக்கும் பெண், கூப்பிட்டால் வந்து விடுபவள் என்பது சமூகத்தின் பொதுப் புத்தியில் உறைந்து கிடக்கிறது. அந்தப் பெண் வரதட்சணைக் கொடுமைக்கு அஞ்சியோ, குடும்ப வன்முறைக்கு முகம் கொடுக்க விருப்பம் இன்றியோ, ஆண்களோடு ஏற்பட்ட கசப்புணர்வுகளாலோ, குடும்பச் சூழ்நிலைகளாலோ தனித்து வாழ முடிவு செய்திருக்கலாம். ஏன், தனிமையை விரும்பியே கூடத் தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனாலும் அவள் எதிர்கொள்ளும் ஆண்களின் கண்களில் எப்போதும் ஓர் அழைப்பு நிழலிட்டிருக்கும்.

அதனால், வீடுகளை வாடகைக்கு விடும் போது ஓராயிரம் கேள்விகள் அவள் மீது நேரடியாகவும் நாசூக்கு முலாம் பூசப்பட்ட வார்த்தைகளும் அவள் மீது வீசப்படும். மாலை இத்தனை மணிக்குள் வந்து விட வேண்டும், பார்ப்பதற்கு ஆண்கள் யாரும் வரக்கூடாது என்றல்லாம் நிபந்தனைகள் விதிக்கப்படும். உடல் நலம் குன்றி, மருத்துவமனைக்குப் போகும் சூழலில் கூட அந்தப் பெண் இன்னொரு பெண்ணைத்தான் அழைக்க நேரும்.

அலுவலக சகாக்களிடம் அவள் சந்திக்க நேரும் விஷமங்கள் வேறு ரகம். சினிமாவிற்குப் போகலாமாவில் துவங்கி, ஒரு பிரேக் எடுத்துட்டு ஒரு நாள் எங்கேயாவது போயிட்டு வருவோமே வரை எத்தனையோ தூண்டில்கள் வீசப்படும்.அந்தப் பெண் அதிகாரியாக இருந்துவிட்டால், அவளைப் பற்றி கிசு கிசு கிளப்புவதற்கே ஒரு குழு ஓயாமல் வேலை செய்யும். அவளது ஒவ்வொரு நடவடிக்கையும் உளவு பார்க்கப்படும். ஒவ்வொரு செயலுக்கும் உள்நோக்கம் கற்பிக்கப்படும். அவள் என்றாவது கோபத்தில் குரல் உயர்த்திப் பேசினால், அதற்கு அவளது தனிமை, காரணமாகச் சொல்லப்படும்.

இன்னொரு வகை ஆண்கள் இருக்கிறார்கள். அனுதாபம் காட்டியே அவளைக் கொல்வார்கள். ஏதோ மனவளர்ச்சி குன்றிய குழந்தையைப் பார்ப்பதுபோல தனிமையில் வாழும் பெண்கள் மீது கருணை கசியப் பார்ப்பார்கள்.

ஏன் இப்படி? அது ஒன்றும் விளங்கிக் கொள்ள முடியாத விஞ்ஞான சூத்திரம் அல்ல. பெண் என்பவள் ஆணோடு சேர்ந்து வாழக் கடமைப்பட்டவள், அவளுக்கென்று தனி அடையாளங்கள் கிடையாது, அப்படி அடையாளங்கள் இருக்கக் கூடாது என்பது சமூகத்தின் பொதுப் புத்தியில் புதைந்து கிடக்கும் விஷயம்.  கல்வெட்டுபோலப் பொறிக்கப்பட்டு, காலங்காலமாய் காப்பாற்றி வரும் விஷயம். ஆனால், அவள் ஒரு மனுஷி. அவளுக்கு மனம் உண்டு, கல்வி உண்டு, அனுபவங்கள் உண்டு, அவை தந்த தீர்மானங்கள் உண்டு என்பது இங்கு இன்னும் அங்கீகரிக்கப்படாத யதார்த்தம்.

 இந்த சமூகத்தில் நாம் தனித்திருக்கும் பெண்கள் குறித்து யோசித்தது இல்லை. அவர்கள் வாழ்வின் நெருக்கடிகள் குறித்து விவாதித்தது இல்லை. பேசப்படாத வார்த்தைகள் நெஞ்சுக் கூட்டில் எஞ்சி இருக்க, அவர்கள் மரணித்தும் போகிறார்கள் தனிமையில்.இனம், நிறம், பாலினம், மதம், அரசியல், தேசிய நிலை, சமுதாய நிலை ஆகியவற்றின் அடிப்படையில் பணி மற்றும் தொழிலில் முன்னுரிமை அளிப்பதோ, பாரபட்சத்தால் வாய்ப்பு வழங்க மறுப்பதோ கூடாது. பணியிலும் தொழிலிலும் சமவாய்ப்பு வழங்கவும் சமமாக நடத்தவும் வேண்டும். ஒரே மாதிரியான தொழில் செய்யும் ஆண் அல்லது பெண் தொழிலாளர்களுக்கு சம ஊதியம் அளிக்கப்பட வேண்டும் என்கிறது சர்வதேச தொழிலாளர் அமைப்பு.

சம ஊதிய நெறிமுறைக்கான விதிகள் சர்வதேச தொழிலாளர் அமைப்பால் உருவாக்கப்பட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்நிலையில், ஆண், பெண் தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம், இந்தியாவில் எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பது ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்று. ஓட்டுரிமை போன்ற ஒருசில உரிமைகள் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆனாலும், சம வேலைக்கு சம ஊதியம் என்பது உட்பட பெரும்பாலான உரிமைகளில் சமத்துவமின்மை என்ற நிலை கட்டுக்கோப்பு கலைந்துவிடாமல் பாதுகாக்கப்பட்டே வருகிறது.

மத்திய, மாநில அரசுப்பணிகள் மற்றும் அமைப்பு சார்ந்த தனியார் நிறுவனங்களில் சம வேலைக்கு சம ஊதியம் என்பது கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், அங்கு ஆண்களுக்கு நிகரான பணிகளில் இருக்கக்கூடிய பெண்களின் விகிதாச்சாரம் என்பது குறைவாகவே உள்ளது. இந்திய அளவிலான மொத்தத் தொழிலாளர்களில்,  அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் அல்லது பணிகளில் வேலை செய்வோரின் எண்ணிக்கை வெறும் 6 சதவிகிதம்தான். மீதமுள்ள 94 சதவிகிதம் பேர், அமைப்புசாரா பணிகளிலேயே உள்ளனர். அவர்கள், பணிப்பாதுகாப்பு உட்பட எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் தினக்கூலிகளாக உள்ளனர். அவர்களில் 67 சதவிகிதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கல்வியின்மை, அறியாமை, திறமையை வளர்த்துக்கொள்ள இயலாமை போன்ற காரணங்களால் அமைப்புசாரா தொழில்களில் அவர்கள் ஈடுபடுகிறார்கள். அங்கு சம வேலைக்கு சம கூலி என்பது கிடையாது.

விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்ட நம் நாட்டில், விவசாயத் தொழிலில் ஈடுபடும் பெண்கள் ஏராளம். நாற்று நடுதல், களை எடுத்தல், நாற்றுக்கட்டு மற்றும் நெல் மூட்டைகளை தலையில் சுமத்தல் போன்ற வேலைகளை அவர்கள் செய்கின்றனர். குனிந்து நிமிர்ந்து செய்யக்கூடிய வேலைகளில் பெரும்பாலும் பெண்களே ஈடுபடுகின்றனர். ஆண்களுடன் ஒப்பிடுகையில், பெண்கள் செய்யும் பணியின் தன்மை கூடுதல் பளுவுடையது. ஆனால், ஆண் தொழிலாளிக்கு வழங்கப்படும் கூலியில் பாதிதான் பெண்களுக்கு வழங்கப்படுகிறது.

கட்டுமானத்தொழிலில் ஏராளமான பெண்கள் ஈடுபட்டுள்ளனர். செங்கல், மண், சிமெண்ட் கலவை போன்றவற்றை சுமந்து செல்வது, கலவை போடுவது, ஆண் கொத்தனார்களுக்கு அத்தனை வேலைகளிலும் உதவி செய்வது போன்ற வேலைகளை பெண்கள்தான் செய்கின்றனர். அவர்களுக்கு சூட்டப்பட்டிருக்கும் பெயரோ, ‘சித்தாள்’. ஆண் தொழிலாளிக்கு வழங்கப்படும் கூலியில் மூன்றில் ஒரு பகுதி கூட இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இந்தக் கூலி முரண்பாடு, மாவட்டத்திற்கு மாவட்டம், ஊருக்கு ஊர் மாறுபடுகிறது.

விவசாயம் மற்றும் கட்டுமானத் தொழில் ஆகியவை தவிர மற்ற வேலைகளில் ஊதிய முரண்பாடு என்பது பெரிதாக இருப்பதில்லை. மற்ற அமைப்புசாரா தொழில்களைப் பொருத்தளவில் வேலையின் அளவைப் பொருத்து கூலி நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு வேலையை ஆண் செய்தாலும், பெண் செய்தாலும் ஒரே கூலிதான். ஆனால், இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், கடின உழைப்பும் பொறுமையும் கூடுதல் நேரமும் பிடிக்கக்கூடிய இந்த வேலைகளை பெரும்பாலும் பெண்கள் மட்டுமே செய்துவருகிறார்கள். இந்த வேலைகளைச் செய்வதற்கு ஆண்கள் ஆர்வம் காட்டுவதில்லை. பீடி சுற்றுதல், கல்குவாரி, செங்கற்சூளை, அப்பளம், பட்டுநெசவு, அரிசி ஆலைகள், உப்பளம் போன்ற தொழில்கள் சில உதாரணங்கள்.

தோல் பதனிடும் தொழில்களில் ஏராளமான பெண்கள் ஈடுபட்டுள்ளனர். ரசாயனம் கலந்த தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி, தோலை சுத்தம் செய்யும் வேலையை பெண்கள் செய்கின்றனர். உப்பளங்களில் வெறுங்காலுடன் இறங்கி, உப்பைக் குவியலாக்கும் வேலையில் அவர்கள் ஈடுபடுகின்றனர். அனல்மின் நிலையங்களில் குவியல் குவியலாக விழுகிற, அனல் பறக்கும் சாம்பலில் இருந்து கரியைப் பொறுக்கும் வேலையை பெண்கள் மட்டுமே செய்கிறார்கள். ஒப்பந்தத் தொழிலாளர்களான அவர்களுக்கு பணிப்பாதுகாப்பு, காலமுறை ஊதியம் என எதுவும் கிடையாது. கரியைப் பொறுக்கிக்கொண்டிருந்தபோது, அனல் தகிக்கும் சாம்பல் விழுந்து உயிரிழந்த பெண்களும் உண்டு. இத்தகைய ஆபத்தான வேலைகளில் ஈடுபடும் பெண்களின் உடல் ஆரோக்கியம் இளம் வயதிலேயே கெட்டுவிடுகிறது.

சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள சூப்பர் மார்க்கெட் மற்றும் பிரமாண்டமான ஜவுளிக்கடைகளுக்காக கிராமப்புறங்களில் இருந்து இளம் பெண்கள் அழைத்துவரப்படுகின்றனர். காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை, அதாவது ஒரு நாளைக்கு 14 மணிநேரம் வேலைவாங்கப்படுகின்றனர். உட்காரக்கூட நேரமில்லாமல் அவர்கள் சுரண்டப்படுகின்றனர். அவர்களின் மாதச் சம்பளம் 5-6 ஆயிரம் மட்டுமே. விடுமுறையே கிடையாது. ஒருநாள் விடுமுறை எடுத்தாலும் சம்பளம் பிடிக்கப்படும். இதைப்போலவே இன்னொரு கொடுமை, சுமங்கலி திருமணத்திட்டம் என்ற பெயரில் பஞ்சாலைகளில் நடைபெறும் மிகப்பெரிய உழைப்புச் சுரண்டல். ‘மூன்று வருட ஒப்பந்தம்.

30 ஆயிரம் ரொக்கப்பணம்’ என்று ஆசைவார்த்தை காட்டி, அப்பாவி இளம் பெண்களை அழைத்துச் சென்று உழைப்பை உறிஞ்சுகின்றனர் பஞ்சாலை உரிமையாளர்கள்.

ஆணுக்கும் பெண்ணுக்குமான ஊதியத்தில் முரண்பாடு கூடாது என்பதற்கான விதிகளை சர்வதேச தொழிலாளர் அமைப்பு உருவாக்கி இருந்தாலும், அதனை இந்திய அரசு ஏற்றுக்கொண்டு சட்டவடிவமாக்கி, முறையாக அமல்படுத்தினால் மட்டுமே பெண்களுக்கு நீதியும் நியாயமும் கிடைக்கும்.

தலைதூக்கும் தண்ணீர்ப் பஞ்சம்!

கோடை காலம் நெருங்கி வரும் இவ்வேளையில் தென்சென்னை மக்களை மகிழ்விக்கும் வகையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார் தமிழக முதல்வர். மாமல்லபுரம் அருகே நெம்மேலியில் அமைக்கப்பட்டுள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது. வேளச்சேரி, பள்ளிப்பட்டு, திருவான்மியூர், தகவல் தொழில்நுட்ப பூங்கா ஆகிய பகுதிகளில் 15 லட்சம் பேர் இத்திட்டத்தால் பயன்பெறுவார்கள். மார்ச் மாதம் முதல் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கெனவே மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது.

ஆனாலும், கடந்த ஆண்டு பருவமழைகள் சரியாகப் பெய்யாத நிலையில், வரும் கோடையில் குடிநீர்ப் பஞ்சம் ஏற்படக்கூடிய சூழலில், கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் சென்னை மாநகருக்கு கைகொடுக்குமா?

சென்னை நகருக்கு நாளொன்றுக்கு தேவையான தண்ணீர் அளவு 1,300 மில்லியன் லிட்டர். சென்னை மெட்ரோ வாட்டர் மூலம் தினமும் 810 மில்லியன் லிட்டர் தண்ணீர்தான் விநியோகம் செய்யப்படுகிறது. காட்டுப்பள்ளியில் இருந்து 100 மி.லி. கிடைத்து வருகிறது. அது மணலியில் உள்ள தொழிற்சாலைகளுக்கும் வடசென்னையின் சில பகுதிகளுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது. நெம்மேலியில் இருந்து தினமும் 100 மி.லி.கிடைக்க உள்ளது. அதை தென்சென்னையில் சில பகுதிகளுக்கு மட்டுமே விநியோகிக்க முடியும்.

சென்னை நகரின் குடிநீருக்கான முக்கிய ஆதாரங்களாக விளங்கும் செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் ஆகிய ஏரிகளில் மூன்று மாதங்களுக்குத் தேவையான அளவே தண்ணீர் இருப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை குடிநீர்த் தேவைக்கு கைகொடுத்து வரும் வீராணம் ஏரியிலும் தண்ணீர் இல்லை. இந்நிலையில், ஆந்திராவின் தண்ணீரை பெரிதாக நம்பியிருக்கிறது சென்னை. ஆனால், அதிலும் சில சிக்கல்கள்.

1983ம் ஆண்டு ஒப்பந்தப்படி, சென்னையின் குடிநீர்த் தேவைக்காக கண்டலேறு அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 12 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும். அங்கிருந்து நொடிக்கு 600 கியூசக்ஸ் தண்ணீரை ஆந்திரா திறந்து விடுகிறது. ஆனால், இங்கு வந்து சேருவது 150 கியூசக்ஸ் மட்டுமே. தமிழகத்திற்கு வருகிற தண்ணீரை வழியிலேயே ஆந்திரப்பகுதி மக்கள் குடிநீருக்காகவும் விவசாயத்துக்காகவும் சட்டவிரோதமாக எடுக்கிறார்கள். அங்கு திறக்கப்படும் தண்ணீர் முழுமையாக சென்னைக்கு வந்துசேருவதில்லை.

தமிழக-ஆந்திர தலைமைச் செயலாளர்கள் தலைமையில் இரு மாநில உயரதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் சென்னையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, நடப்பு ஆண்டில் 8 டி.எம்.சி. தண்ணீர் தருமாறும், 2013-14 ஆண்டு முழுமைக்கும் 12 டி.எம்.சி. தண்ணீர் தருமாறும் ஆந்திராவை தமிழகம் கேட்டுக்கொண்டது. ஜனவரி-ஏப்ரல் மாதங்களில் விடுவிப்பதற்காக 5 டி.எம்.சி. தண்ணீரை இருப்பு வைக்குமாறு ஆந்திராவை ட்டுக்கொண்டிருக்கிறது தமிழக அரசு.

தலைநகர் என்பதால் சென்னையின் குடிநீர்ப் பிரச்சினையை சமாளிப்பதற்கு ஆட்சியாளர்கள் மெனக்கெடுவார்கள். ஆனால், மாநிலத்தின் மற்ற பகுதிகளின் கதி?

வேலூர் மாநகராட்சியில் 8 அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. 10 நாட்களுக்கு மேலாகியும் குடிநீர் விநியோகிக்கப் படாததால், ஆத்திரமடைந்த வேலூர் சலவன்பேட்டை பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு, அரசு பேருந்தை சிறைபிடித்த சம்பவம் இரு வாரங்களுக்கு முன்பு நடந்தது. மேயர் கார்த்தியாயினி, நேரில் சென்று அவர்களை சமாதானப்படுத்தினார்.

மதுரை
மதுரை மாநகரக் குடிநீருக்கான ஆதாரம் வைகை அணை. அங்கிருந்து குடிநீர்த் திட்டங்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு நகரில் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் குறைவாக இருப்பதால், மதுரையில் குடிநீர்த் தட்டுப்பாடு வரும் என்று அஞ்சப்படுகிறது.

சுமார் 12 லட்சம் மக்கள் வசிக்கிற மதுரை மாநகராட்சியில் தினமும் 136 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், அதைவிட குறைவாகத்தான் தண்ணீர் கிடைக்கிறது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. பல பகுதிகளில் லாரிகள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. மே மாதம் இறுதிவரை விநியோகிக்கப் போதுமான தண்ணீர் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

நெல்லை
வடகிழக்குப் பருவமழை, தொடர்ச்சியாக நான்காவது முறையாக நெல்லை மாவட்டத்தை ஏமாற்றியுள்ளது. அங்குள்ள அணைகளில் தண்ணீர் இருப்பு கடந்த ஆண்டு 78 சதவிகிதமாக இருந்தது. இந்த ஆண்டு 25 சதவிகிதம் மட்டுமே உள்ளது. இதனால், இங்கு அசாதாரண சூழல் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தில் 26 கூட்டுக்குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவற்றில் தென்காசி, தோட்டமலையார், கடனாநதி உள்ளிட்ட திட்டங்களில் வழக்கத்தைக் காட்டிலும் மிகக்குறைந்த அளவே தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. பாபநாசம் அணையில் கால்வாசி அளவுக்குத்தான் தண்ணீர் இருப்பு உள்ளது. தாராபுரம், வள்ளியூர், நாங்குநேரி, குருவிக்குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் நிலத்தடி நீர் பல அடிகளுக்குக் கீழே போய்விட்டது. கிராமப் பஞ்சாயத்துகளில் ஆற்று நீரையும் போர் மூலம் எடுக்கப்படும் உவர்ப்பு நீரையும் கலந்து விநியோகம் செய்கிறார்கள். கோடைகாலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவும். தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு மோசமாக இருக்கும்" என்கிறார், தமிழ்நாடு  குடிநீர் வடிகால் வாரிய ஓய்வுபெற்ற நிர்வாகப் பொறியாளர் சி.சாந்தகுமார்.

சிவகங்கை
கடந்த ஆண்டு மழை இல்லாததால், வானம் பார்த்த பூமியான சிவகங்கை மாவட்டத்தில் நீர்நிலைகள் வறண்டு கிடக்கின்றன. நிலத்தடி நீர் மிகவும் கீழே போய்விட்டது. வைகை ஆற்றின் கரையோரங்களில் கூட நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது. மனிதர்களுக்கான குடிநீருக்கே திண்டாட வேண்டியிருக்கிறது. இதில் ஆடு,மாடுகளுக்குத் தேவையான தண்ணீருக்கு எங்கே போவதென்று தெரியவில்லை. கோடை காலத்தில் குடிநீருக்கு திண்டாடப்போவது நிச்சயம்" என்கிறார், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி கூ. சங்கிலி.

கோயமுத்தூர்
தமிழகத்தின் பெருநகரங்களில் ஒன்றாக கோவையும், குடிநீர்ப் பஞ்சத்தை எதிர்கொள்ள உள்ளது. அந்நகரின் குடிநீருக்கான முக்கிய ஆதாரங்களில் ஒன்றான சிறுவாணி அணையில் தண்ணீர் இல்லை. சிறுவாணியின் டெட் ஸ்டோரேஜ் தண்ணீரை குடிநீருக்காக எடுக்க முடியுமா என்பது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே ஆலோசிக்கத் தொடங்கினர். அது குறித்து சிறுவாணி அணையின் தலைமை பொறியாளருக்கு கடிதமும் எழுதினர்.

இதற்கிடையில், பில்லூர் 2வது குடிநீர்த் திட்டத்தில் இருந்து ஏற்கெனவே 30 மில்லியன் லிட்டர் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அங்கிருந்து கூடுதலாக 30 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இன்னும் சில நாட்களில் 125 மில்லியன் லிட்டர் எடுக்கப்பட்டு முழுமையான விநியோகம் செய்யப்படும் என்று மேயர் செ.ம.வேலுச்சாமி கூறியிருப்பது கோவை மக்களுக்கு ஆறுதல் செய்தி.

நீலகிரி
பருவமழை பொய்த்ததால் நீலகிரியின் நீர் நிலைகளில் குறைந்த அளவே தண்ணீர் உள்ளது. உதகமண்டலத்தைச் சுற்றியுள்ள 10 நீர்த்தேக்கங்கள்தான், ஊட்டி மற்றும் அதையொட்டிய கிராமங்களின் குடிநீர்த் தேவையை நிறைவேற்றுகின்றன. அவற்றில் 7 நீர்த்தேக்கங்கள் வறண்டு விட்டன. தற்போது  பார்சன்ஸ்வேலியில் ஓரளவு தண்ணீர் உள்ளது. அதை வைத்து கோடை காலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு குடிநீர் வழங்க திட்டமிட்டுள்ளனர். அங்கு ஊரகப்பகுதி மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு அபாயம் உள்ளது. குடிநீர்த் தட்டுப்பாட்டை சமாளிப்பது குறித்து சமீபத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார், மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக்.

நாமக்கல்
கடந்த 28 ஆண்டுகளில் 2012ம் ஆண்டு மிகக் குறைவான அளவு மழை பெய்தது. இம்மாவட்டத்தின் மழை அளவை தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் 1985 முதல் பதிவு செய்து வருகிறது. அதன் புள்ளிவிவரப்படி, ஆண்டுக்கு சராசரியாக 900 மி.மீ. மழை பெய்துவரும் நாமக்கல் மாவட்டத்தில், 2012ம் ஆண்டில் 502 மி.மீ. மட்டுமே மழை பெய்துள்ளது. அங்கு சிலவாரங்களுக்கு முன்பிருந்தே குடிநீர்ப் பஞ்சம் ஆரம்பித்துவிட்டது.

கடுமையான வறட்சி நிலவுகிறது. ஒட்டுமொத்த தமிழகமும் தண்ணீர் நெருக்கடியை நோக்கிப் போகிறது. ஆழ்குழாய் கிணறுகள் பொய்த்துப்போகின்றன. ஈரோடு பகுதியில் பனைமரங்கள் கூட காய்ந்து வருகின்றன. பொதுவாக, தமிழகத்தில் கோடை மழையின் அளவு 20 சதவிகிதம். அது சரியாக பெய்துவிட்டால் ஓரளவு சமாளித்துவிடலாம். அதுவும் பொய்த்துப் போனால் குடிநீருக்கு சிரமம்தான்" என்று கவலையோடு கூறுகிறார், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் செ.நல்லசாமி.

நீர்நிலைகள் எல்லாம் காய்ந்து கிடக்கும் நிலையில், தற்போதைய தண்ணீர் சிக்கலை சமாளிப்பதற்கு நிலத்தடி நீர் கைகொடுக்குமா?

தண்ணீர்த் தட்டுப்பாடு எவ்வளவு கடுமையானதாக இருந்தாலும், நிலத்தடி நீர் கைகொடுத்த காலமும் உண்டு. இப்போது நிலைமை மாறிவிட்டது. ஊற்றுநீருக்கு முக்கிய ஆதாரம் ஆற்றுப்படுகைகள். தமிழகத்தில் 34 ஆற்றுப்படுகைகள் உள்ளன. அவற்றில் 18 மிகப்பெரியவை. அனைத்து ஆற்றுப் படுகைகளிலும் மணல் சுரண்டி எடுக்கப்பட்டுவிட்டது. விதைநெல்லை விற்பது போல, மணல் கொள்ளையடிக்கப்பட்டுவிட்டது. எனவே, ஊற்றுநீர் அளவு மிகவும் குறைந்துள்ளது. காவிரிப் படுகையில் 250 டி.எம்.சி., ஊற்றுநீர் கிடைக்கும். மற்ற ஆறுகளில் 362 டி.எம்.சி.யும், சிறிய ஆறுகளில் 425 டி.எம்.சி,யும் ஊற்றுநீர் கிடைக்கும். மணல் சுரண்டப்பட்டு விட்டதால், இப்போது 200 டி.எம்.சி. கூட கிடைக்க வாய்ப்பில்லை என்கின்றனர் நிபுணர்கள்.  நிலத்தடி நீர் கடுமையாக சுரண்டப்பட்டதால் இராமநாதபுரம், தூத்துக்குடி, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட பல கடலோரப்பகுதிகளில் உப்புநீர் புகுந்து விட்டது. நச்சு ரசாயனங்களும் கலந்துவிட்டன. அதைக் குடித்தால் வயிறு, சிறுநீரகம் தொடர்பான நோய்கள் உட்பட பலவித நோய்கள் வருகின்றன. கருக்கலைப்புகள் ஏற்படுகின்றன. உடல் ஆரோக்கியம் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன" என்று கவலையோடு கூறுகிறார், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் எஸ்.ஜனகராஜன்.

எதிர்வரும் தண்ணீர் நெருக்கடிக்கு உடனடித் தீர்வாக ஆலோசனை ஒன்றை முன்வைக்கிறார் தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கத்தின் தலைவர் வீரப்பன்.

தமிழக ஆறுகளில் இருந்து ராட்சதக் கிணறுகள் மூலம் தண்ணீர் எடுப்பதற்கு பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பெரு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ஆண்டு ஒன்றிற்கு 50-60 டி.எம்.சி. தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. அதனால், நிலத்தடி நீர் அதள பாதாளத்தை நோக்கிப் போகிறது. தற்போதைய தண்ணீர் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, அந்நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமங்களை ரத்து செய்ய வேண்டும். அதனால், நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும். இது, தண்ணீர்த் தட்டுப்பாட்டை சமாளிக்க ஓரளவு உதவும்" என்கிறார் வீரப்பன்.

உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, அண்மையில் சட்டமன்றத்தில் உறுப்பினர்களின்  கேள்விகளுக்கு பதிலளிக்கையில், வரும் கோடையில் சென்னை நகரில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பாடுவதற்கான வாய்ப்பு குறைவு. நீர் ஆதாரங்களில் மே மாதம் வரைக்குமான தண்ணீர் கையிருப்பில் உள்ளது" என்றார்.
காவிரி நடுவர் மன்றம் 2007ல் வழங்கிய இறுதித்தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டு விட்டது. எனவே பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் மாதம் 2 டி.எம்.சி. வீதம் மொத்தம்  10 டி.எம்.சி. தண்ணீரை சுற்றுச்சூழல் மற்றும் குடிநீர்ப் பயன்பாட்டுக்காக கர்நாடகம் திறந்துவிட வேண்டும். காவிரியில் இருந்துதான் ஏராளமான கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மூலமாக தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் தண்ணீர் செல்கிறது. ஆகவே, அந்த 10 டி.எம்.சி. தண்ணீர் கிடைப்பதால் கோடைகாலத்தில் குடிநீர்ப் பிரச்சினை இருக்காது" என்கிறார், தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் ஓவுபெற்ற தலைமைப் பொறியாளர் நடராஜன்.

இந்தத் தகவல்களும் வல்லுநர்களின் ஆலோசனைகளும் நம் காதுகளை குளிர்விக்கின்றன. கூடவே, நம் தாகத்தையும் தீர்ப்பதாக இருந்தால் மகிழ்ச்சிதான்.


தீர்வுகள் என்ன?
எதிர்கால நலன் அடிப்படையில் செய்தாக வேண்டியவை என வல்லுநர்கள் முன்வைக்கும் ஆலோசனைகள் :
தமிழகத்தில் ஏரிகள், கண்மாய்கள் என மொத்தம் 39,702 நீர்நிலைகள் உள்ளன. அவற்றை ஒரு மீட்டர் முதல் ஒன்றரை மீட்டர் வரை ஆழப்படுத்த வேண்டும். இதன் மூலம் 200 டி.எம்.சி. தண்ணீரைத் தேக்க முடியும். இது காவிரியில் வரும் தண்ணீரின் அளவு. தண்ணீர் தேக்குவதன் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் உயரும். வீராணம் ஏரி, மதுராந்தகம் ஏரி, இராமநாதபுரம் ஏரி என 116 பெரிய ஏரிகள் உள்ளன. அவற்றையும் இதேபோல ஆழப்படுத்தினால், 150 டி.எம்.சி. தண்ணீர் சேமிக்கலாம். இவை தவிர, 20-25 அணைகளில் வண்டல்மண் தேங்கிக் கிடக்கிறது. அதை அகற்றினால், 40 டி.எம்.சி. தண்ணீர் தேக்க முடியும். இப்படியாக சுமார் 400 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும்."

- பொறியாளர் வீரப்பன்

சென்னையில் சராசரியாக 1,200 மி.மீ. மழை பெய்கிறது. அதை சேமித்தாலே கோடை காலத்தில் தண்ணீர்த் தேவையை முழுமையாக சமாளித்துவிட முடியும். திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 3,600 ஏரிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதில் 1,000 ஏரிகள் காணாமல் போய்விட்டதாக வைத்துக்கொண்டாலும் 2,600 ஏரிகள் மிஞ்சியிருக்கும். அதைப் பாதுகாத்தாலே தண்ணீர்ப் பிரச்சினை இருக்காது. ஆனால், அதற்கான முயற்சி இல்லை. கடல் நீரைகுடிநீராக்கும் திட்டங்களுக்குப் பதிலாக ஏரிகளைப் பாதுகாத்துப் பராமரித்தாலே போதுமானது. செலவும் குறைவு. புதிதாக 3,000 கோடி ரூபாயில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் வரப்போவதாகக் கூறுகிறார்கள். அந்தப்பணத்தில் பாதியை செலவு செய்தாலே ஏரிகள் அனைத்தையும் பாதுகாத்துவிட முடியும்.

அதுதவிர, மறுசுழற்சியில் தண்ணீரைப் பயன்படுத்துவது குறித்தும் யோசிக்க வேண்டும். சென்னையில் கூவம், பக்கிங்காம் கால்வாய், அடையாறு ஆகிய ஆறுகளில் ஒவ்வொரு நாளும் 1,400 மில்லியன் லிட்டர் கழிவு நீராக கடலுக்குச் செல்கிறது. அதை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்காமல், தண்ணீர் இல்லை என்று ஒப்பாரி வைக்கிறோம். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீடுகளில் திட்டங்கள் குறித்து மட்டுமே அரசுக்கு ஆலோசனைகளைச் சொல்லும் அதிகாரிகளும் பொறியாளர்களும் நீர்நிலைகளைப் பாதுகாப்பது, தண்ணீரை மறுசுழற்சியில் பயன்படுத்துவது போன்ற நல்ல ஆலோசனைகளை அரசுக்கு சொல்ல வேண்டும்."
- பேராசிரியர் ஜனகராஜன்


தாமதமாகும் 5வது நீர்த்தேக்கம்
சென்னை மாநகரக் குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் அகற்றுவாரியம் நாளொன்றுக்கு 830 மில்லியன் லிட்டர் தண்ணீரை வீட்டு உபயோகத்துக்காக சப்ளை செய்து வருகிறது. சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு 65 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. விரிவாக்கம் செய்யப்பட்ட மாநகராட்சிப் பகுதிகளுக்கும் தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டியுள்ளது. அதிகரித்துவரும் சென்னை நகரின் குடிநீர்த் தேவைக்காக புதிய நீர்த்தேக்கம் ஒன்றை உருவாக்க தமிழக அரசு முயற்சித்து வருகிறது. அதற்காக தனியார் நிலம், அரசு நிலம் மற்றும் வனத்துறை நிலம் உட்பட 1,495 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது. கண்டலேறு-பூண்டி கால்வாயில் இருந்து வரும் தண்ணீர் அதில் தேக்கிவைக்கப்படும். திருவள்ளூர் மாவட்டத்தில் அதற்கான நிலம் கையகப்படுத்துவதில் உள்ள பிரச்சினைகள் காரணமாக அது தாமதம் ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.


மதுரையில் ‘நிலைத்தெப்பம்’
இந்த ஆண்டு மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழா கொண்டாடுவற்குக்கூட தண்ணீர் இல்லை. பொதுவாக தெப்பக்குளம் வறண்டு போனால், வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து நிரப்புவார்கள். இந்தாண்டு தெப்பத்திருவிழாவிற்காக  16 கி.மீ. தொலைவிலுள்ள மணலூர் நீரேற்று நிலையத்தில் இருந்து தண்ணீர் கொண்டுவர நடந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. எனவே, ‘நிலைத்தெப்பம்’ அமைத்து தெப்பத்திருவிழா கொண்டாடப்பட்டது. வறட்சி காரணமாக  50 ஆண்டுகளுக்கு முன்பாக, இதேபோல் நிலைத்தெப்பம் அமைத்து விழா கொண்டாடப்பட்டது.


கிராமத்தில் மினரல் வாட்டர்
மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது கோட்டநத்தம்பட்டி. சுமார் 1,600 குடும்பங்கள் உள்ள இக்கிராம மக்களின் குடிநீர்த் தேவையை நிலத்தடி நீரே பூர்த்தி செய்கிறது. சமீபத்தில் இங்குள்ள நிலத்தடி நீரில் உப்புத்தன்மை அதிகரித்ததால், குடிநீருக்குத் திண்டாடினர் இக்கிராம மக்கள்.

மாவட்ட ஆட்சியராக சகாயம் இருந்தபோது, கோட்டநத்தம்பட்டி உள்ளிட்ட 3 கிராமங்கள் முன் மாதிரி கிராமங்களாக அறிவிக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் எங்கள் கிராமத்திற்கு வந்திருந்தார். குடிநீர்ப் பிரச்சினை குறித்து அவரிடம் முறையிட்டோம். உடனே, ‘உப்பு நீரைக் குடிநீராக்கும் இயந்திரம் நிறுவப்படும்’ என உறுதி அளித்தார். அதையடுத்து, 9 லட்சம் ரூபாய் செலவில் உப்பு நீரைக் குடி நீராக்கும் இயந்திரம் அமைக்கப்பட்டது. தற்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா, அதை இயக்கி வைத்தார். இயந்திரப் பராமரிப்புச் செலவை ஊராட்சியே ஏற்றுள்ளது. மினரல் வாட்டர் என்பதை கேன்களில் மட்டுமே பார்த்து வந்த எங்கள் மக்கள், தற்போது மினரல் வாட்டரைக் குடங்களில் பிடித்துச் செல்கின்றனர்" என்று மகிழ்ச்சியோடு கூறுகிறார், கோட்டநத்தம்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் கந்தப்பன்.

இது தானியங்கி முறையில் இயங்கும் இயந்திரம். 18 லிட்டர் மினரல் வாட்டருக்கான விலை 2  ரூபாய்தான். மாதம் 60 ரூபாய் மொத்தமாக செலுத்துபவர்கள், தங்கள் கைரேகையை இயந்திரத்தில் பதிவு செய்துகொள்ளலாம். அவர்களின் கைரேகை, சென்சாரில் பதிந்தவுடன் 18 லிட்டர் தண்ணீர் தானாகவே கொட்டுகிறது.
இதே தண்ணீரைக் கடையில் வாங்கினால் 25 ரூபாய். ஆனா, நாங்கள் அதை 2 ரூபாய்க்கு வாங்குறோம்" என்று சந்தோஷத்தோடு கூறுகிறார் ராஜேஸ்வரி. கோட்டநத்தம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 5 கிராமங்களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த முயற்சி நடைபெறுகிறதாம்.

சனி, 9 மார்ச், 2013

மன்னிப்பா, அப்படீன்னா?


பிரிட்டிஷ்   வரலாற்றிலேயே  நடந்த  மிக  மோசமான சம்பவம் இதுதான். இதைப்பற்றி அப்போதே வின்ஸ்டன் சர்ச்சில் மிகச் சரியாக அசுரத்தனமான செயல் என்று கண்டித்து இருந்தார். இங்கே நடந்ததை நாம் எப்போதும் மறக்கக் கூடாது. அமைதிப் போராட்டங்களுக்கான உரிமையை பிரிட்டன் எப்போதும் காக்கக் கூடிய நிலைக்கு  நாமெல்லாம் உறுதி ஏற்க வேண்டும். ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் வைக்கப்பட்டிருக்கும் வருகையாளர் பதிவேட்டில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரான், 20 பிப். 2013 அன்று எழுதியது...

அமிர்தசரஸ் நகரம் அன்று இருந்த நிலையை உணர்ந்த பலர், நான் செய்தது சரியென்று சொல்கிறார்கள். நிறையப் பேர் நான் மாபெரும் தவறு இழைத்து விட்டதாகவும் கூறுகிறார்கள். நான் இப்போது சாக விரும்புகிறேன். மேலுலகம் சென்று என்னை படைத்தவனிடம் நான் செய்தது சரியா, தவறா என்று கேட்கப்போகிறேன்.’ மரணப்படுக்கையில் ஜெனரல் டயர் சொன்ன வாசகம் இது. பாரிசநோய் தாக்கியிருந்ததால், அப்போது பேசுவதற்கே மிகவும் சிரமப்பட்டார். உயிரைவிடும் கடைசி நொடியிலும் கூட அவருக்கு ஜாலியன் வாலாபாக் படுகொலை மட்டும் மறக்கவேயில்லை.

டயரால் மட்டுமல்ல, ஒரு நூற்றாண்டு ஆகப்போகிறது. இருந்தும் இன்னும் இந்தியர்களால் மறக்க முடியாத, ஜீரணிக்க முடியாத துயரச் சம்பவம் அது.

முதல் உலகப்போரின்போது, சுமார் பன்னிரெண்டு லட்சம் இந்தியர்களை ராணுவ வீரர்களாகவும், தொழிலாளர்களாகவும் போரில் ஈடுபடுத்தியது பிரிட்டிஷ் அரசு. மனிதவளம் மட்டுமின்றி உணவு, செல்வம் என்று போருக்காக இந்தியாவின் வளங்கள் சுரண்டப்பட்டன. வங்காளத்திலும், பஞ்சாப்பிலும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் இந்த அநியாய நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. போரின் முடிவில் 43,000 இந்தியர்கள் பிரிட்டனுக்காக போர்க்களத்தில் உயிரிழந்தார்கள் என்கிற தகவலை பொதுமக்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

இப்படிப்பட்ட கொந்தளிப்பான சூழலில் பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்ட் டயர், தன் அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளில் கூட்டங்கள் போடவோ, போராட்டங்கள் நடத்தவோ தடை விதித்திருந்தார்.

1919 ஏப்ரல் 13. பாரம்பரியமாக கொண்டாடப்பட்டுவரும் பைசாகி பண்டிகைக்காக அமிர்தசரஸ் நகரின் ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் சீக்கியர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள் என்று மும்மதத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று சுமார் இருபதாயிரம் பேர் கூடியிருந்தார்கள்.  மாலை 4.30 மணிக்கு விழா தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜெனரல் டயர், சுமார் 100 வீரர்களோடு மைதானத்துக்கு வந்தார். அவர்களில் 50 பேர் ஆயுதம் தரித்திருந்தார்கள். மெஷின்கன் ஏந்திய இரண்டு வாகனங்களும் வந்தன. ஆனால், மைதானத்துக்குள் நுழையும் பாதை குறுகியதாக இருந்ததால், அவ்வாகனங்கள் உள்ளே நுழைய முடியவில்லை.

மக்களை கலைந்து போகச் சொல்லி அவர் எந்த எச்சரிக்கையும் விடுக்கவில்லை. பிற்பாடு விசாரணையின்போது, இதற்கு அவர் சொன்ன விளக்கம் வேடிக்கையானது. ‘கூட்டத்தைக் கலைக்க நான் அங்கே செல்லவில்லை. அவர்களது ஒழுங்கீனத்துக்காக தண்டிக்க மட்டுமே விரும்பினேன்.’

சுடுமாறு வீரர்களுக்கு உத்தரவிட்டார். துப்பாக்கிகள் வெறித்தனமாக 10 நிமிடங்களுக்கு தொடர்ச்சியாக முழங்கிக்கொண்டே இருந்தன, தோட்டாக்கள் தீரும் வரை. மொத்தமாக 1,650 ரவுண்டுகள். முதற்கட்டமாக பெண்களும், குழந்தைகளும் பெருமளவில் உயிரிழந்தனர். எங்கும் மரண ஓலம். சுற்றி வளைக்கப்பட்டு விட்டதால், தப்பிக்க வழியே இல்லை. உயிர் பிழைக்க வழி தெரியாமல் சுற்றுச்சுவரை ஒட்டியிருந்த கிணற்றுக்குள் நிறையப் பேர் குதித்தார்கள். துப்பாக்கிக் குண்டுக்கு தப்பி, நெரிசலில் இறந்தவர்களும் கணிசமானவர்கள்.

‘துப்பாக்கிக் குண்டுகள் தீர்ந்துவிட்டதால் மட்டுமே என்னால் நடவடிக்கையை தொடரமுடியவில்லை. அவை இன்னும் கூடுதலாக இருந்திருந்தால், தீரும் வரை சுட்டுக்கொண்டே இருந்திருப்பேன்’. லண்டனில் நடந்த கமிஷன் விசாரணையில், ஜெனரல் டயர் எவ்வித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் இச்சம்பவத்தை விவரிக்கும்போது, சுற்றியிருந்தவர்கள் அதிர்ந்து போனார்கள்.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பல மாதங்களுக்கு உறுதிப்படுத்தப்படவில்லை. அந்த மரணக் கிணற்றில் இருந்து மட்டுமே 120 உடல்கள் எடுக்கப்பட்டன. பிரிட்டிஷ் அரசாங்கம் நியமித்திருந்த கண்துடைப்பு விசாரணைக்குழு, மொத்தமாக 379 பேர் மட்டுமே மரணித்தார்கள் என்று அநியாயமாகப் புளுகியது. பிற்பாடு அக்குழுவில் இருந்த ஒருவரே, உண்மை எண்ணிக்கை பலமடங்கு அதிகம் என்று ஒப்புக்கொண்டார்.

கூடியிருந்த மக்களின் எண்ணிக்கையையும்  சுடப்பட்ட ரவுண்டுகளின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டால், அரசு சொல்லும் எண்ணிக்கை நம்பவே முடியாதது. எனவே, இந்திய தேசிய காங்கிரஸ் இப்படுகொலைகளை விசாரிக்க, தனியாக ஒரு குழுவை நியமித்தது. 1,500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும், தோராயமாக 1,000 பேர் உயிரிழந்ததாகவும் அக்குழு சொன்னது.

இந்திய வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட மிகப் பெரியளவிலான இந்தப் படுகொலைகளை மூடிமறைக்க இங்கிருந்த ராணுவ அதிகாரிகள் எவ்வளவோ முயன்றனர். பிரிட்டனுக்கே கூட 6 மாதங்கள் கழித்து, டிசம்பரில்தான் விஷயம் தெரிந்தது. நம்மூர் தலைவர்களுக்கே கூட உடனடியாக தெரியவில்லை. கல்கத்தாவில் இருந்த தேசியக்கவி தாகூருக்கு, சம்பவம் நடந்து 40 நாட்கள் கழித்து 22 மே 1913 அன்றுதான் தெரிந்ததாம்.

தனது மேலதிகாரியாக பஞ்சாப்பை ஆண்டுகொண்டிருந்த கவர்னர் மைக்கேல் ஓட்வையருக்கு, ஜெனரல் டயர் இச்சம்பவம் குறித்த ஓர் அறிக்கையை அளித்திருக்கிறார். அதில், இந்தியர்கள் புரட்சிகர ராணுவத்தைக் கட்டமைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தினேன் என்று தன் வீரபிரதாபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இவ்விளக்கத்தை ஏற்றுக்கொண்ட கவர்னர், நீங்கள் செய்ததுதான் சரி என்று ஒப்புக்கொண்டு டயரைப் பாராட்டியும் இருக்கிறார். பிற்பாடு 21 ஆண்டுகள் கழித்து இச்செயலுக்காக லண்டனில், பஞ்சாப்பைச் சேர்ந்த உத்தம்சிங் எனும் வீரனால் சுட்டுக் கொல்லப்பட்டார் ஓட்வையர்.

வின்ஸ்டன் சர்ச்சில்,ஹென்றி அஸ்க்வித் போன்ற பிரிட்டன் தலைவர்கள் அப்போதே இப்படுகொலைகளை கடுமையாகக் கண்டித்தார்கள் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. படுகொலைகளை விசாரிக்க, பிரிட்டிஷ் அரசு நியமித்த ஹண்டர் கமிஷனால் உருப்படியான நியாயம் இந்தியர்களுக்கு கிடைக்கவில்லை. ஜெனரல் டயர் மட்டும் பணியிலிருந்து ராஜினாமா செய்ய வற்புறுத்தப்பட்டார். படுகொலைகளுக்குக் காரணமானவர்களுக்கு அரசியல் அழுத்தம் காரணமாக எந்தத் தண்டனையும் கிடைக்கவில்லை.

ஜாலியன் வாலாபாக் சம்பவம் நடந்து 28 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவுக்கு பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் கிடைத்தது. சுதந்திரம் கிடைத்தே 66 ஆண்டுகளும் ஆகி விட்டன. ஆனால், அதற்காக இங்கிலாந்து மன்னிப்புக் கேட்குமென்று இந்தியர்கள் இன்றும் எதிர்பார்க்கிறார்கள்.

இங்கிலாந்து ராணி எலிசபெத், சுதந்திரத்துக்குப் பிறகு 1961லும், 1983லும் இந்தியாவுக்கு வருகை புரிந்தார். அப்போது ஜாலியன் வாலாபாக் குறித்து எதுவுமே பேசவில்லை. பிறகு 1997ல் வந்தபோது, சம்பவ இடத்துக்கு நேரில் சென்று மவுன அஞ்சலி செலுத்தினார். நம் கடந்தகாலத்தில் எவ்வளவோ கசப்பான சம்பவங்கள் நடந்திருக்கலாம், ஜாலியன் வாலாபாக் மாதிரி. வரலாற்றைத் திரும்பவும் மாற்றி எழுத முடியாது. வரலாறு ஏராளமான வருத்தங்களும், ஏராளமான மகிழ்ச்சிகளும் நிறைந்தது. வருத்தங்களைப் பாடமாகப் படித்து, எதிர்காலத்தில் மகிழ்ச்சியைக் கட்டமைக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்னதாக இதைப் பற்றிப் பேசினார். இது நேரடி மன்னிப்பு இல்லையே என்று அப்போதே  இந்தியர்கள் அங்கலாய்த்தார்கள்.

இப்போதும்  அதேமாதிரிதான். பிரிட்டனின் பிரதமர் ஒருவர், ஜாலியன் வாலாபாக்குக்கு வருகை புரிந்தது இதுதான் முதல்முறை. வருகைப் பதிவேட்டில் வருத்தம் தெரிவித்திருக்கிறாரே தவிர, மன்னிப்புக் கேட்கவில்லை என்று மீண்டும் குரல்கள் உயரத் தொடங்கியிருக்கின்றன.

எலிசபெத் ராணி மன்னிப்புக் கேட்கவில்லை என்று வருத்தம் பரவியபோது, இந்தியப் பிரதமராக இருந்த ஐ.கே.குஜ்ரால் சொன்னதை நாம் நினைவுறுத்திப் பார்ப்போம். தாம் பிறப்பதற்கு முன்பாகவே நடந்த சம்பவங்களுக்கு, இப்போது இருப்பவர்கள் மன்னிப்புக் கேட்கவேண்டுமா என்ன?

அன்னமிட்ட ‘அம்மா மெஸ்’


தமிழக அரசு, சென்னையில் ஆரம்பித்திருக்கும் மலிவு விலை உணவகத்திற்கு ஏழை மக்களிடையே நல்ல வரவேற்பு

கூலித்தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், செக்யூரிட்டிகள், பள்ளி மாணவர்கள், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூடிவ்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள்... எனப் பல தரப்பினர், ‘அம்மா மெஸ்’ஸில் சாப்பிட நீண்ட க்யூவில் நிற்கிறார்கள். தமிழக அரசு சென்னையில் ஆரம்பித்திருக்கும் மலிவு விலை சிற்றுண்டி உணவகத்தை, ‘அம்மா மெஸ்’ என்றுதான் செல்லமாக அழைக்கிறார்கள் மக்கள்.

பசிக்காக மட்டுமே என்றில்லாமல், சாப்பாடு டேஸ்ட்டாக இருக்கிறதா என்று பார்க்கவே கூட்டம் அலைமோதுகிறது. நாம் சாப்பிட்ட தி.நகர் சிவஞானம் சாலை உணவகத்தில் மட்டும் சராசரியாக காலையில் ஆயிரத்து இருநூறு பேரும், மதியம் ஆயிரத்து ஐநூறு பேரும் சாப்பிடுகிறார்கள்.

காலை : இட்லி ஒரு ரூபாய். மதியம் : சாம்பார் சாதம் ஐந்து ரூபாய், தயிர் சாதம் மூன்று ரூபாய். இவ்வளவுதான் மொத்த மெனு. இரவு உணவு இப்போதைக்கு இல்லை.

உணவகம் என்பதாலேயே, டோக்கன் வாங்கும் இடத்தில் நிறைய பேர் ஒரு பிரிஞ்சி, ஒரு லெமன் என்று இஷ்டத்துக்கும் இல்லாததை ஆர்டர் செய்கிறார்கள். மாநகராட்சிப் பணியாளர்கள் பொறுமையாக விளக்கிச் சொல்ல வேண்டியிருக்கிறது.

சாப்பிட்டவர்கள் அனைவரும் திருப்தி தெரிவிக்கிறார்கள். அளவு போதும். ருசியும் பிரமாதம். இப்படியே மெயின்டெயின் பண்ணா நல்லாயிருக்கும்" என்கிறார், செக்யூரிட்டியாக வேலை பார்க்கும் முருகன்.

பாதுகாக்கப்பட்ட குடிநீர் (கேன் வாட்டர்) வழங்கப்படுகிறது. சாப்பிடுவதற்கு சுகாதாரமான இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. சாப்பிட்டு முடித்த தட்டுகளை உடனுக்குடன் அகற்றி, சுத்தம் செய்கிறார்கள். சமைக்கும் இடம் நேர்த்தியாக இருக்கிறது. மொத்தத்தில் சிறப்பான சேவை.

சாப்பாடு சமைப்பது, பரிமாறுவது, சுத்தம் செய்வது போன்ற வேலைகளை மகளிர் சுய உதவிக்குழுக்களைச்  சேர்ந்தவர்கள் செய்கிறார்கள். இதற்கென மாநகராட்சியில் பயிற்சி பெற்றவர்கள் இந்தப் பெண்கள். கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது, டோக்கன் வழங்குவது போன்ற பணிகளை மாநகராட்சி ஊழியர்களே கையில் எடுத்துக் கொள்கிறார்கள்.

வீட்டுப் பிரச்சினைகளாலே பல சமயங்கள்ல சாப்பாடு எடுத்து வரமாட்டோம். மதியம் வெளியேதான் சாப்பிடுவோம். காசில்லைன்னா, சாப்பிடாம கூட இருந்துடுவோம். இனிமே இங்கேயே ரெகுலரா சாப்பிடலாம்னு முடிவெடுத்துட்டோம்" என்று நம்மிடம் சொன்னார்கள், பள்ளி மாணவர்களான தினகரன், முருகப்பன்.

சென்னை மாநகரில் மொத்தம் 15 உணவகங்கள் அமைந்துள்ளன. இந்த மலிவு விலை சிற்றுண்டி  உணவகத் திட்டத்திற்காக கிலோ ஒரு ரூபாய் வீதம் மாதம் 500 டன் அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வழங்குகிறது. வாரத்தில் 7 நாட்களுக்கும் இந்த உணவகங்கள் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஏழைகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்தத் திட்டம், மிக விரைவில் தமிழகம் முழுக்க செயல்படவேண்டும்’  என்று விருப்பம் தெரிவித்தனர், இங்கே பசியாறிய மக்கள்.

வெள்ளி, 8 மார்ச், 2013

நீதிக்கான நேரம் இது


நீதிக்கான நேரம் இது

நீதியைப் பெற்றுத் தரும் நேரம் நெருங்கி வருகிறது.

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் முடிவுற்று நான்காண்டுகள் ஆகின்றன. ஆனாலும் அந்தப் போரின்போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு - வெறும் மீறல்களா அவை? மனிதகுலத்திற்கு எதிரான கோரமான குற்றங்கள்- இதுவரையில் நியாயம் கிடைக்கவில்லை.

வல்லரசுக்களுக்கு அஞ்சாமல் உலக அரங்கில் அநீதிக்கு எதிராக குரலெழுப்பிய வரலாற்றுப் பெருமை இந்தியாவிற்கு உண்டு. இரண்டாம் உலகப் போருக்குப் பின் (1946), தென்னாப்ரிக்காவில் நிறவெறி தலையெடுத்து தாண்டவமாடியபோது, 1948ல் ஐக்கிய நாடுகள் அவையின் முதல் கூட்டத்திலேயே அதனை விவாதப் பொருளாகக் கொண்டுவந்த நாடு இந்தியா.   அன்று இந்தியா அப்போதுதான் விடுதலை பெற்ற இளம் குடியரசு. இன்றுபோல் உலகம் உற்று நோக்கும் பொருளாதாரப் புலி அல்ல. ஆனாலும் யாருக்கும் அஞ்சாமல் அது குரலெழுப்பியது. தென்னாப்ரிக்கா மட்டுமல்ல, நமீபியா, பாலஸ்தீனம், திபெத், காங்கோ என்று எங்கெல்லாம் அநீதிகள் இழைக்கப்பட்டதோ அங்கெல்லாம் அது நீதிக்காகக் குரல் எழுப்பியது. ஏன், இலங்கையிலே இனப் போராட்டம் தீவிரமடைந்தபோது, இந்திரா காந்தி தமிழ்க் குழுக்களுக்கு இந்திய மண்ணில் போர்ப் பயிற்சி அளித்ததும், 1987ல்  யாழ்ப்பாணம் முற்றுகையிடப்பட்டபோது, ராஜீவ் காந்தி ஆபரேஷன் பூமாலை என்ற பெயரில் இலங்கை அரசின் கண்டனத்தையும் பொருட்படுத்தாமல் இந்திய விமானப் படை விமானங்கள் மூலம் உணவுப் பொருட்களை வீசியதும் நெடுங்காலத்திற்குமுன் நிகழ்ந்த சம்பவங்கள் அல்ல.

இப்போதும் அப்படி ஒரு வரலாற்றுக் கடமையை ஆற்ற வேண்டிய தருணம், இந்தியாவிற்கு வாய்த்திருக்கிறது. கடந்த ஆண்டு (மார்ச் 22) நடைபெற்ற ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில், சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கு எதிராக நிகழ்ந்த குற்றங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க இலங்கை அரசை வற்புறுத்தும் தீர்மானம் ஒன்று, அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டு, ஆதரவாக 24 ஓட்டுக்கள், எதிராக 15 ஓட்டுக்கள், நடுநிலைமை 8 நாடுகள் என்று நிறைவேறியது. இந்தியா அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தது.

ஆனால், ஓராண்டாகியும் அங்கே நிலைமை சீரடையாததால், இப்போது கூடியுள்ள மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா இன்னொரு தீர்மானத்தைக் கொண்டுவருகிறது. ஐ.நா.வின் நேரடி மேற்பார்வையில் இலங்கையில் மனித உரிமைகள் காப்பாற்றப்பட வேண்டும் என்று அந்தத் தீர்மானம் கோரும் எனத் தெரிகிறது.

அமெரிக்கா இப்போது கொண்டுவரவுள்ள தீர்மானம் வெற்றி பெற 24 நாடுகளின் ஆதரவு வேண்டும். சென்றமுறை தீர்மானம் வெற்றி பெறுமா என்னும் அளவிற்கு நிலைமை கடுமையாக இருந்தது. ஆனால், இந்த முறை அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்திற்கு சென்றமுறையை விட அதிக ஆதரவு கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஏனெனில், சென்ற முறை இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த ரஷ்யா, சீனா, க்யூபா போன்ற நாடுகள் சுழற்சி முறையில் கவுன்சிலிருந்து வெளியேறிவிட்டதால், அவை இந்த முறை வாக்களிக்க முடியாது.  அதே நேரம் சென்ற முறை இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த காங்கோ, ஈக்குவேடர், இந்தோனேஷியா, குவைத், மாலத்தீவு, மௌரிடானியா, பிலிப்பைன்ஸ், கத்தார், தாய்லாந்து, உகாண்டா ஆகிய 10 நாடுகள் இப்போதும் உறுப்பினர்களாக இருக்கின்றன.

இந்தச் சூழ்நிலையில் இந்தியாவின் ஆதரவு முக்கியமானதாகிறது. இந்தியாவே முன் முயற்சி எடுத்து, இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்திருக்க வேண்டும். அந்த வாய்ப்பைத் தவறவிட்டுவிட்ட இந்தியா, ஆதரவாக வாக்களித்து நீதிக்குக் குரல் கொடுக்க வேண்டும்.

ஏதாவது அற்ப காரணங்களைச் சொல்லி, இந்தியா இந்தக் கடமையிலிருந்து தவறுமானால் அது தமிழருக்கு மட்டுமல்ல, மனித குலத்திற்கெதிரான அநீதி.