Powered By Blogger

வெள்ளி, 23 நவம்பர், 2012


எரிவாயு இணைப்புப் பெற்றவர்கள் நவம்பர் மாதம் 15ம் தேதிக்குள் KYC (KNOW YOUR CUSTOMER) என்ற விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து அந்தந்த ஏஜென்சியில் கொடுக்க வேண்டும் என்று இந்திய எண்ணெய் நிறுவனம் தெரிவித்துள்ளது.


எதற்காக உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்  (KYC) என்று தெரிவித்துள்ளது?
அண்மையில் ஓர் இணைப்புக்கு ஆறு சிலிண்டர்கள் வரை மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும், அதற்கு மேற்பட்ட சிலிண்டர்களை  சந்தை விலையில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்தது. அதையடுத்து ஒரே முகவரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் இருப்பதையும், ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் வைத்திருப்பதையும் கண்டறியவே இந்த விண்ணப்பம். ஒவ்வொரு ஏஜென்சியும் தங்களது வாடிக்கையாளரை அறிந்துகொள்ளவும், இந்த விண்ணப்பத்தை அளிக்கச் சொல்கின்றன.

ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் இருந்தால், அவற்றில் ஒன்று ரத்து செய்யப்படும் என்று சொல்லப்படுகிறது. ஒரே இணைப்பில் இரண்டு சிலிண்டர்கள் இருந்தால் பிரச்சினைகள் இருக்காது.


விண்ணப்பம் எங்கு வழங்கப்படுகிறது?
விண்ணப்பப் படிவங்கள் ஒவ்வொரு ஏஜென்சிக்கும் அனுப்பப்பட்டுள்ளன. அவரவர் ஏஜென்சியிடமே பெற்றுக் கொள்ளலாம் அல்லது கீழ்க்கண்ட இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆதாரங்கள் என்னென்ன?
முகவரிச் சான்றுக்கு கீழ்க்கண்டவற்றில் ஒன்றை ஆதாரமாகக் கொடுத்தால்போதும்.

1. குடும்ப அட்டை 2. எலெக்ட்ரிசிட்டி பில் (கடைசி மூன்று மாத பில்)  3.டெலிபோன் பில் (கடைசி மூன்று மாத பில்) 4. பாஸ்போர்ட் 5. பணிபுரியும் அலுவலகத்திலிருந்து சான்றிதழ் 6. எல்.ஐ.சி. பாலிசி 7. வாக்காளர் அடையாள அட்டை 8. வீட்டு வாடகை ரசீது 9. பான்கார்டு 10. ஓட்டுநர் உரிமம் 11. வங்கிக் கணக்குப் புத்தகம்.

அடையாளச் சான்றுக்குக் கீழ்க்கண்டவற்றில் ஒன்றை ஆதாரமாகக் கொடுத்தால் போதும்.

1. பான்கார்டு 2. பாஸ்போர்ட் 3.வாக்காளர் அடையாள அட்டை 4. ஓட்டுநர் உரிமம் 5 . மத்திய / மாநில அரசின் அடையாள அட்டை.

இவற்றுடன் சில முகவர்கள், முதன் முதலில் நீங்கள் எரிவாயு இணைப்புப் பெற்றபோது செலுத்திய டெபாசிட்டிற்கான ரசீதையும் கேட்கிறார்கள்.


எந்தத் தேதிக்குள் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.?
நவம்பர் 15ம் தேதிக்குள் கொடுக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் அடுத்த சிலிண்டர் வாங்குவதற்குள் விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்துகொடுக்க வேண்டும். கடிதம் வரவில்லை என்றால்கூட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்திசெய்து கொடுக்கலாம்.


கொடுக்காவிட்டால் என்னாகும்?
ஒருவேளை உங்கள் கன்ஸ்யூமர் ஐடி பிளாக் ஆகியிருந்தால், உங்களுக்குத் தெரியாமல் போகலாம். அப்படி இருந்தால், அடுத்த சிலிண்டர் வராமல் போகலாம்.

இது குறித்து அனைத்திந்திய எல்.பி.ஜி. விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் பொருளாளர் டி.சாமிவேலு தெரிவிப்பதாவது, வருஷத்துக்கு மானியத்துக்கான சமையல் எல்.பி.ஜி.க்கு மட்டும் அரசுக்கு 42,000 கோடி ரூபாய் செலவாகுது. இதுல ஒரு குடும்பத்துல இருக்கிற ரெண்டு பேர் பேர்ல மானிய சிலிண்டர்களை வாங்குறது நிறையவே நடக்குது. செப்டம்பர் 10, 2009ல ஓர் அரசாணை பிறப்பிச்சிருக்காங்க. அதன்படி வீட்டுக்கு ஓர் இணைப்புதான் கொடுக்கணும். அதனால, கே.ஒய்.சி. விண்ணப்பத்தைக் கொடுத்து பூர்த்தி பண்ணித் தரச் சொல்லியிருக்கோம். இதுக்கு எந்தக் கட்டணமும் கிடையாது. இதுல முதல் கட்டமா, ஒரே முகவரியில இருக்கிற பல இணைப்புகளோட லிஸ்ட் எடுத்து அதை சரிபார்க்கிறோம். சில இடங்களில் ஒரே முகவரியில் பல குடும்பங்கள் குடியிருப்பாங்க. அவர்கள் 5ம் நம்பர் வீடு என்றால் 5A, 5B என்று முகவரி கொடுக்கணும். இவங்களை கம்ப்யூட்டர்ல லிஸ்ட் எடுத்து, அந்தந்த கேஸ் கம்பெனிகள்ல இருந்து கடிதம் அனுப்புவாங்க. அந்தக் கடிதத்தைக் கொண்டுபோய் கேஸ் ஏஜென்சியில கொடுத்தா, விண்ணப்பம் கொடுப்பாங்க. அதுல ரெண்டு காப்பி ஜெராக்ஸ் எடுத்து, ஆதாரங்களை இணைச்சு பூர்த்தி பண்ணி ஓர் ஒரிஜினலையும், ரெண்டு ஜெராக்ஸையும் கேஸ் ஏஜென்சில கொடுக்கணும். ஒரு ஜெராக்ஸ்ல சீல் வெச்சுக் கொடுப்பாங்க. இதை, இந்த கே.ஒய்.சி. விண்ணப்பத்தைக் கொடுத்த பிறகு நேரடியா வந்து சரிபார்ப்பாங்க.

ஒரே வீட்டில் ஓர்  இணைப்பில் ரெண்டு சிலிண்டர் வைத்துக் கொள்வது தவறில்லை. ஆனால், ஒரே வீட்டுல இருக்கிற மனைவி பாரத் கேஸ்ல கனெக்ஷன் வெச்சிருந்தாங்கன்னா, கணவனோ, மாமியாரோ அல்லது வேறு உறுப்பினரோ இண்டேன்ல கனெக்ஷன் வெச்சுக்கிறதும் இருக்கு. இதைக் கண்டுபிடிக்க இண்ட்ரா ஆயில் கம்பெனி ஒரு லிஸ்ட் தயார் பண்ணிட்டு இருக்காங்க. அதாவது பாரத் கேஸ், இண்டேன் கேஸ், ஹெச்.பி.கேஸ் மூணு பேரும் சேர்ந்து ஒரே பெயர்ல இருக்கிற கனெக்ஷன், ஒரே முகவரியில இருக்கிற கனெக்ஷன் எல்லாத்தையும் கண்டுபிடிச்சிடுவாங்க. இப்போ என் பேர சாமிவேலுன்னு கம்ப்யூட்டர்ல தட்டுனா, என்னோட டீட்டெயில் எல்லாம் வந்துடும். அதனால,வேற ஊர்லகூட கனெக்ஷன் இருந்தாலும் கண்டுபிடிச்சுடுவாங்க" என்றா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக